9 28
இலங்கை

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் : அரசாங்கம் அறிவிப்பு

Share

தேவை ஏற்பட்டால் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் வன்முறை வெடித்தால் அது கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ்(Tiran Alles) இன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

“ஜனாதிபதி தேர்தல் அமைதியாக நடைபெற்று வருகின்றது, இந்த சூழலைப் பேணுமாறு பொதுமக்களிடமும் அரசியல் கட்சித் தலைவர்களிடமும் நான் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

ஜனாதிபதி தேர்தலின் போது தேசத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்த எங்களால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளோம்” என்று அமைச்சர் அலஸ் கூறினார்.

ஒன்பதாவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு இன்று காலை 07 மணிக்கு ஆரம்பமானது.இந்த வாக்களிப்பு மாலை 04 மணியுடன் நிறைவடையவுள்ளது.

இந்த தேர்தல் நிறைவடைந்த பின்னர் வன்முறை வெடிக்கும் என்ற அச்சத்தில் ஊரடங்கு சட்டத்தை அரசாங்கம் நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share
தொடர்புடையது
world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 227
செய்திகள்அரசியல்இலங்கை

தமிழர் தேசத்தின் இறைமையை அங்கீகரிக்கும் புதிய தீர்வுத்திட்ட வரைபு: ஈழத் தமிழர் பொதுச்சபை அதிரடி ஆரம்பம்!

இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்துவரும் இனப்பிரச்சினைக்கு நிலையானதொரு தீர்வை எட்டும் நோக்கில், தமிழ்த் தேசத்தின் இறைமை...

world 226
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நிலக்கரி ஊழல் விசாரணை: தகவல்களை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறு அமைச்சர் விஜித ஹேரத் கோரிக்கை!

கடந்த காலங்களில் நிலக்கரி இறக்குமதியில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல் மற்றும் முறைகேடுகள் தொடர்பான அனைத்துத் தகவல்களையும்,...