17247313140
சினிமா

முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..

Share

முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..

சின்னத்திரையில் தற்போது பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்துவிடம் இருக்கும் ஆதாரம் ஒன்றை அனைவருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என சிட்டி முயற்சி செய்து வருகிறார்.

அதற்கு ரோகினியை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளார். முத்துவின் போனில் மீனாவின் தம்பி குறித்தும் இருக்கும் ரகசியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டால், ரோகினியை தொந்தரவு செய்பவரை பார்த்துக்கொள்வதாக சிட்டி கூறியிருந்தார்.

இதனால் முத்துவின் போனில் இருக்கும் விஷயத்தை வெளிக்கொண்டுவர ரோகினி முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

இந்த ப்ரோமோவில், தூங்கி எழுந்த முத்து தனது படுக்கையிலேயே தன் செல்போனை விட்டு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முத்துவின் செல்போனை எடுக்க முயற்சிக்கிறார் ரோகினி. ஆனால், அந்த சமயத்தில் திடீரென முத்து அங்கே மீனாவை தேடி வர, உடனடியாக அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் ரோகினி.

இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று அடுத்தவாரம் எபிசோடில் தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம், முத்துவிடம் இருக்கும் ஆதாரத்தை ரோகினி வெளிக்கொண்டு வருகிறாரா என்று.

Share
தொடர்புடையது
idayam murali
சினிமா

ஓடிடி தளத்தில் வெளியாகும் இதயம் முரளி.

நடிகர் அதர்வா நடிப்பில் வெளிவந்து வெற்றிபெற்ற திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் எப்போது என்று தெரிந்துகொள்ள ஆவலோடு...

Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...