unnamed 1
செய்திகள்உலகம்

தலிபான்களுக்கும், பாகிஸ்தானுக்கும் ஆரம்பிக்கிறது பிரச்சனை

Share

தலிபான் தலையீட்டையடுத்து, காபூலில் இருந்து விமான இயக்கத்தை பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் நிறுத்தியுள்ளது.

ஊழியர்களை மிரட்டுதல், வலுக்கட்டாயமாக விதிகளை மாற்றுதல் போன்ற தலிபான் தலையீட்டால், பாகிஸ்தான் ஏர்லைன்ஸ், விமான இயக்கத்தை நிறுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் அதிகாரத்தை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்துள்ளனர்.

இதனால் காபூலில் உள்ள பெரும்பாலான மக்கள் வெளிநாடுகளுக்குப் புலம்பெயர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து வெளிநாட்டு விமான ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தமது விமானப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளன.

எனினும் பாகிஸ்தான் ஆரம்பத்திலிருந்து தலிபான் அரசுக்கு ஆதரவு அளித்து வருகிறது. இந்நிலையில் தமது விமானங்களைப் பாகிஸ்தான் காபூலில் இருந்து இயக்கி வந்தது.

குறித்த ஒரு விமான நிலையமே சர்வதேச விமானங்களை இயக்கி வந்த நிலையில், தற்போது அங்கிருந்து விமானங்களை இயக்குவதை நிறுத்தியுள்ளதாக, பாகிஸ்தான் சர்வதேச ஏர்லைன் அறிவித்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
20
இலங்கைசெய்திகள்

இந்திய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இரகசியமாக கையாளும் அரசாங்கம்!

இந்தியப் பிரதமரின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தத்தை பொதுமக்களுக்கு வெளியிட முடியாது என்று...

19
இலங்கைசெய்திகள்

மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வாழும் நிலப்பரம்பல் : அதிர்ச்சிக்குள்ளாக்கும் ஆய்வுகள்

இலங்கையில் 44 வீத நிலப்பரப்பில் மனிதர்களும் யானைகளும் ஒன்றாக வசிப்பதாக ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த...

18
இலங்கைசெய்திகள்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகள் : முன்னாள் கடற்படைத் தளபதியின் அதிர்ச்சி வாக்குமூலம்

திருகோணமலை கடற்படை தள நிலத்தடி சிறைகளில் தனிநபர்களை சட்டவிரோதமாக தடுத்து வைத்திருந்தமை தொடர்பாக குற்றப் புலனாய்வுத்...

16
இலங்கைசெய்திகள்

அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை கடிதங்கள்

25 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் 100 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன....