24 66e525941aa93
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

Share

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இலங்கை அரசைக் கவிழ்க்க இரண்டு வன்முறைப் போராட்டங்களை நடத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தேசிய அதிகார எழுச்சி தொடர்பிலான விசேட அறிக்கையொன்றை முன்வைக்கும் போதே குறித்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுடன் தேசிய மக்கள் சக்தி நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்காவிட்டாலும், தினசரி போராட்டங்கள் நடத்தி, காலி முகத்திடலில் கூடாரம் போட்டு, பொது வேலைநிறுத்தங்களை நடத்தி பெரும் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988 க்கு இடையில் ஜனதா விமுக்தி பெரமுனாவால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதமேந்திய எழுச்சி இலங்கை வரலாற்றில் ஒரு இரத்தக்களரி காலகட்டம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பரவலான கொலைகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஊரடங்குச் சட்ட மீறல்கள் நடந்ததாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், தோல்வியடைந்த கலவரத்தின் பின்னர் கட்சி வன்முறையை கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தின் பக்கம் திரும்பிய வேளையில் அநுர கட்சியின் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அநுர கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர், வரலாற்றில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச கூடகம் ஒன்றிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
பூசா சிறைச்சாலை
இலங்கை

மஹர சிறைச்சாலையில் இருந்து இடம்மாற்றப்பட்ட கைதிகள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட கலவரத்தினை அடுத்து, அங்கிருந்து 20 கைதிகள் பூசா சிறைச்சாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகச்...

prison
இலங்கை

கட்டுப்பாட்டிற்குள் வந்த பதற்ற நிலை – வெளியேறிய தீயணைப்பு வாகனங்கள்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்றநிலை தற்போது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதுடன், அனைத்துக் கைதிகளையும் தற்போது அவர்களது சிறைக்...

Scammers
இலங்கை

அமைச்சரின் பெயரில் இடம்பெறும் பாரிய மோசடி.

கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க பிரதி அமைச்சரை போல் ஆள்மாறாட்டம்...

Featured
இலங்கை

மஹர சிறையில் தற்போதைய நிலை .

ராகம பொலிஸ் எல்லைக்குட்பட்ட மஹர சிறைச்சாலையைச் சுற்றியுள்ள A, 246/கண்டலியத்த பாலுவ – மேற்கு, 246/C...