24 66e525941aa93
இலங்கைசெய்திகள்

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

Share

இலங்கை அரசைக் கவிழ்க்க வன்முறைப் போராட்டங்களை நடத்திய அநுர தரப்பு

இலங்கையில் ஜனாதிபதித் தேர்தலில் முன்னணி வேட்பாளராக களமிறங்கிய அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான கட்சி, இலங்கை அரசைக் கவிழ்க்க இரண்டு வன்முறைப் போராட்டங்களை நடத்தியதாக சர்வதேச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் மற்றும் தேசிய அதிகார எழுச்சி தொடர்பிலான விசேட அறிக்கையொன்றை முன்வைக்கும் போதே குறித்த செய்தியில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவின் முக்கிய புவிசார் அரசியல் போட்டியாளரான சீனாவுடன் தேசிய மக்கள் சக்தி நெருக்கமாக செயல்பட்டு வருவதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற போராட்டத்திற்கு தேசிய மக்கள் சக்தி உத்தியோகபூர்வமாக ஆதரவளிக்காவிட்டாலும், தினசரி போராட்டங்கள் நடத்தி, காலி முகத்திடலில் கூடாரம் போட்டு, பொது வேலைநிறுத்தங்களை நடத்தி பெரும் பங்காற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

1971 மற்றும் 1988 க்கு இடையில் ஜனதா விமுக்தி பெரமுனாவால் ஆரம்பிக்கப்பட்ட ஆயுதமேந்திய எழுச்சி இலங்கை வரலாற்றில் ஒரு இரத்தக்களரி காலகட்டம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் பரவலான கொலைகள் மற்றும் அதிகாரப்பூர்வமற்ற ஊரடங்குச் சட்ட மீறல்கள் நடந்ததாகவும் கூறுகிறது.

எவ்வாறாயினும், தோல்வியடைந்த கலவரத்தின் பின்னர் கட்சி வன்முறையை கைவிட்டு தேர்தல் ஜனநாயகத்தின் பக்கம் திரும்பிய வேளையில் அநுர கட்சியின் அரசியல் குழுவிற்கு நியமிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் அநுர கட்சித் தலைவராக பதவியேற்ற பின்னர், வரலாற்றில் இடம்பெற்ற குற்றச் செயல்கள் தொடர்பில் சர்வதேச கூடகம் ஒன்றிடம் மன்னிப்பு கோரியதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...