20 10
இலங்கைசெய்திகள்

வன்முறை சம்பவங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: தேசிய மக்கள் சக்தி சந்தேகம்

Share

வன்முறை சம்பவங்களை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சி: தேசிய மக்கள் சக்தி சந்தேகம்

செப்டம்பர் 18ம் திகதி பிரசார நடவடிக்கைகளுக்கான காலக்கெடுவுக்குப் பின்னர், எதிர்க்கட்சியினர் தங்கள் சதிகாரர்களை, தேசிய மக்கள் சக்தியினராக காட்டிக்கொண்டு வன்முறைச் சம்பவங்களை உருவாக்கலாம் என்பதில் சந்தேகம் இருப்பதாக தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்துள்ளார்.

நாட்டில் வன்முறைச் சம்பவங்களை தேசிய மக்கள் சக்தி உருவாக்கும் என எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் அரசியல் மேடைகளில் தொடர்ந்து கூறிவருகின்ற நிலையிலேயே இந்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாக கூறுபவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்களை எடுக்க வேண்டும் என்று பாதுகாப்புப் தரப்பினரிடம் சில்வா கோரிக்கை விடுத்துள்ளார்.

செப்டம்பர் 18க்கு பிறகு தேர்தல் பிரசார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. எனவே அந்த காலகட்டத்தில் அரசியல் கட்சிகள் பற்றி பேச ஊடக நிறுவனங்களும் சிரமப்படுகின்றன.

இதன்போதே சதிகாரர்கள், தேசிய மக்கள் சக்தியின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயற்சிக்கலாம் என்று ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், கோட்டாபய ராஜபக்சவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக தாக்குதலை உருவாக்கியவர்களுக்கு இது பெரிய விடயமல்ல என்றும் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
25 688de9f74b46a
இலங்கைசெய்திகள்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு

2024/2025 மதிப்பீட்டு ஆண்டிற்கான வருமான அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக வழங்கப்பட்ட தனிப்பட்ட அடையாள எண்ணின் (PIN) செல்லுபடியாகும்...

25 688df4fc39fbe
இலங்கைசெய்திகள்

வாய்த்தர்க்கத்தில் ஒருவர் சுட்டுக்கொலை.. பொலிஸாரிடம் சரணடைந்த சந்தேகநபர்

அம்பலாந்தோட்டை, ஹுங்கம பிங்காம பகுதியில் இன்று (02) மதியம் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது....

25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

25 688e158f2c449
இலங்கைசெய்திகள்

சட்டத்தை நடைமுறைப்படுத்தியவரால் நிராகரிக்கப்பட்ட ஜனாதிபதி சிறப்புரிமைகள்

இலங்கையின் முதல் நிறைவேற்றதிகார ஜனாதிபதியான ஜே.ஆர்.ஜெயவர்த்தனவால் கொண்டுவரப்பட்ட ஜனாதிபதிகளுக்கான சலுகைகளை அவரே பெற்றுக்கொள்ளவில்லை என அரசியல்...