fc176ad3 antonio
செய்திகள்உலகம்

கொரோனாவால் 10 கோடி பேர் வறுமையில்!- ஐ.நா. சபை தகவல்

Share

கொரோனாவால் உலகம் முழுவதும் 10 கோடி பேர் வறுமையில் வாடுவதாக, ஐ.நா. சபை தகவல் வெளியிட்டுள்ளது.

பெருந்தொற்று நோயான கொரோனாவால் வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன.

கொரோனா வைரஸ் பெருந்தொற்றுக்கு எதிராக இன்னும் உலக நாடுகள் போராடிவரும் நிலையில், அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்தில் சர்வதேச நிதியம் நடாத்திய நிகழ்வொன்றில், ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பங்கேற்று உரையாற்றினார்.

இதன்போது அவர், ‘கொரோனா வைரஸ் பெருந்தொற்று 10 கோடிக்கும் மேற்பட்ட மக்களை வறுமையில் தள்ளிவிட்டது. 400 கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கு சமூக ஆதரவு குறைவாக உள்ளது அல்லது இல்லை. சுகாதார பராமரிப்பு இல்லை. அவசரமாக தேவைப்படும்போது வருமான பாதுகாப்பு இல்லை’ எனக் குறிப்பிட்டார்.

மேலும், வளர்ந்து வரும் நாடுகள் பலவும் பின்தங்கி உள்ளன எனவும், வலுவான பொருளாதார நாடுகள் மீட்புக்காக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 28 சதவீத அளவுக்கு மீட்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள எனவும் குறிப்பிட்ட அவர், ஆனால் குறைவான வளர்ச்சி அடைந்த நாடுகள், சராசரியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8 சதவீதம்தான் முதலீட்டுக்காக ஒதுக்க முடியும் எனவும் கூறினார்.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
gold 2
வணிகம்இலங்கைஉலகம்

இன்றைய தினத்திலும் தங்கத்தின் விலையில் சரிவு!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலையானது இன்றும் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியினை பதிவு செய்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள...

fake doctor
உலகம்

15 மரணங்களுக்கும் நானே காரணம் – அதிர வைக்கும் போலி மருத்துவரின் பின்னணி!

ஜெர்மனியைச் சேர்ந்த நோய்த்தணிப்பு சிகிச்சை மருத்துவர் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தனது 15 நோயாளிகளின்...

Israel Iran
உலகம்

ஈரான் பணியும்வரை தாக்குதல் தொடரும் – அமெரிக்காவின் அதிரடி

ஹோர்முஸ் நீரிணைப் பகுதியில் சுதந்திரமான போக்குவரத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கும் ஈரானின் திறனை மேலும் பலவீனப்படுத்துவதற்காக அமெரிக்க...

iran us
உலகம்

அமெரிக்காவின் 80 இற்கும் அதிகமான இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் – எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தினை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக்...