28 6
இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

Share

கடவுச்சீட்டுகளுக்கான நெருக்கடி: குடிவரவு கட்டுப்பாட்டாளர் போலந்து பயணம்

கடவுச்சீட்டுக்களுக்கான விண்ணப்பங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், குடிவரவு கட்டுப்பாட்டாளர் மற்றும் துணைக் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் போலந்து நிறுவனத்துடன் பேச்சு நடத்துவதற்காக அங்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடவுச்சீட்டுக்களின் தயாரிப்பை துரிதப்படுத்துவதற்காகவே அவர்கள் அங்கு சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

புதிய இணையக்கடவுச்சீட்டுக்களை தயாரிக்கும் பொறுப்பு எம்ஆர்பிகள் தேல்ஸ் டிஐஎஸ் ஃபின்லாந்து ( Thales DIS Finland Oy)என்ற நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எனினும் இந்த தயாரிப்புக்கள் கால தாமதமாவதால், இலங்கையில் கடவுச்சீட்டு விநியோகத்தில் நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது.

வெற்றுக்கடவுச்சீட்டுகள் இல்லாமையே இந்த நிலைமைக்கான காரணமாகும்.

இந்தநிலையில் புதிய இ-கடவுச்சீட்டுகள் 2024 அக்டோபர் மாத இறுதியில் இலங்கைக்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

அவை ஏற்கனவே பயன்படுத்தப்படும் கடவுச்சீட்டுக்களில் இருந்து வித்தியாசமாக இருக்கும் மற்றும் பிற பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டிருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share
தொடர்புடையது
Untitled 63
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மீனவர்களுக்குப் பாதுகாப்பு: 20 இலட்சம் ரூபாய் வரையிலான புதிய காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தியது அரசு!

இலங்கையின் விவசாயம், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் கீழ் இயங்கும் விவசாய மற்றும்...

Untitled 62
செய்திகள்அரசியல்இலங்கை

இலங்கைக்கு அவசரமாக எரிபொருள் வழங்க ரஷ்யா சம்மதம்: அமைச்சர் விஜித ஹேரத்துடன் முக்கிய பேச்சுவார்த்தை!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ரஷ்யாவின் பிரதி வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரே ருடென்கோ (Andrey Rudenko)...

Untitled 61
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யால பருவ நெல் சாகுபடி: விடுமுறை நாட்களிலும் விவசாய சேவை மையங்கள் இயங்கும்!

யாழப் பருவ நெல் சாகுபடி தொடங்கியுள்ள பகுதிகளில் விவசாயிகளுக்கு உரம் விநியோகிப்பதை எளிதாக்கும் வகையில், வேளாண்...

Untitled 60
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தம்பலகமுவவில் அதிரடி: 2,000 லிட்டருக்கும் அதிகமான டீசல் பதுக்கிய இருவர் கைது!

திருகோணமலை, தம்பலகமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மொல்லிப்போத்தானா பகுதியில், எவ்வித சட்டபூர்வமான அனுமதிப்பத்திரமுமின்றிப் பெருமளவிலான டீசலைப்பதுக்கி வைத்திருந்த...