இலங்கைசெய்திகள்

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

Share
9 12
Share

கடவுச்சீட்டு விநியோகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடியின் பின்னணியில் சதி – கடும் நெருக்கடியில் அரசியல்வாதிகள்

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் கடவுச்சீட்டு வழங்குவதில் பாரிய ஊழல்கள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பான முறைப்பாடுகளின் அடிப்படையில் முழுமையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்தார்.

தற்போதைய கடவுச்சீட்டு பற்றாக்குறையானது இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் இருந்து செயற்கையாக உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நாட்களில் கடவுச்சீட்டு பெற வருபவர்கள் ஒரு கிலோ மீற்றர் வரை வரிசையில் நிற்கின்றனர் என இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய விசாரணைகளுக்கமைய, நாளொன்றுக்கு சுமார் 3000 கடவுச்சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். அடுத்த வருடமும் தற்போதுள்ள கோரிக்கையை நிறைவேற்ற முடியாது என பற்றாக்குறை இருப்பதாக பாசாங்கு செய்யும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் விரைவில் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் மற்றும் விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சின் செயலாளர் ஆகியோர் இது தொடர்பில் ஆணைக்குழுவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இந்த ஊழலில் ஈடுபட்ட அதிகாரி ஒருவர் தொழில் பயணம் என்ற போர்வையில் நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயற்சிப்பதாக முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அலுவலகம் அருகே நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள் மிகவும் கோபமடைந்துள்ளதாகவும், இதனால் கடும் பாதுகாப்பு அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கடவுச்சீட்டு விவகாரம் தொடர்பான விசாரணையில் ஊழல் தொடர்பான ஆதாரங்கள் ஏற்கனவே கிடைத்துள்ளதால், இதற்கு காரணமானவர் கைது செய்யப்பட்டு, அவர்களுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட உள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Share
Related Articles
26 1
இலங்கைசெய்திகள்

இறுதியாக கிளிநொச்சியில் தமிழ்த் தேசியத் தலைமையை பார்த்தோம் – சிறிதரன் பகிரங்கம்

நாங்கள் இறுதியாக கிளிநொச்சியில் எங்கள் தலைவரை பார்த்தோம். அங்கு தான் பல வரலாறுகளை கற்றோம் என...

28 1
இலங்கைசெய்திகள்

இந்தியாவிலிருந்து கிடைத்த தகவல்! கட்டுநாயக்க விமான நிலையத்தில் திடீர் சோதனை

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து கிடைத்த தகவலுக்கமையவே இந்த...

27 1
உலகம்ஏனையவைசெய்திகள்

15 மணிநேர செய்தியாளர் சந்திப்பை நடத்தி சாதனை நிகழ்த்தியுள்ள மாலைத்தீவின் ஜனாதிபதி

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சு(Mohamed Muizzu )கிட்டத்தட்ட 15 மணி நேரமாக செய்தியாளர் சந்திப்பு ஒன்றை...

29
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது..! உளறியவருக்கு சுமந்திரன் பதிலடி

ஒருவர் யாழ்ப்பாணம் ஏழாலைக்குள்தானே இருக்கின்றது என்கின்றார். இதற்கு முன்னர் இரண்டு இலட்சம் மக்கள்தான் நாட்டின் சனத்தொகை...