35 2
இலங்கைசெய்திகள்

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

Share

இலங்கை விமானப்படையில் இணையும் அமெரிக்காவின் அதிநவீன விமானம்

இலங்கை விமானப்படைக்கு (SLAF) அமெரிக்காவினால் (US) அன்பளிப்பு செய்யப்பட்ட Beechcraft King Air 360ER விமானம் அடுத்த வாரம் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்தின் பங்காளித் திறனைக் கட்டியெழுப்பும் நோக்கத்தில் இந்த அன்பளிப்பு வழங்கப்படுவதாக அமெரிக்கத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்த நவீன விமானம், தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் தடுப்பு மற்றும் கடத்தல் என்பவற்றை எதிர்த்துப் போராடுவதில் இலங்கையின் திறன்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இது அமெரிக்க-இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் அதே வேளையில் நாட்டின் கடல்சார் கண்காணிப்பு நடவடிக்கைகளை கணிசமாக மேம்படுத்தும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

அத்தோடு, 19 மில்லியன் டொலர் அமெரிக்க அரசாங்கத்தின் மானியத்தில் விமானம் மற்றும் ஆதரவு சேவைகளும் உள்ளடக்கப்பட்டுள்ளதோடு, இவை அனைத்தும் இலங்கை விமானப்படைக்கு எந்த கட்டணமும் இன்றி வழங்கப்படுகின்றன.

Beechcraft King Air 360ER ஆனது இலங்கையின் கடற்பரப்பில் ரோந்து மற்றும் கடல்சார் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளும் திறனை அதிகரிக்க அதிநவீன தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தப்பட்டுள்ளது.

இந்த ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக, இலங்கை விமானப்படை வீரர்கள் விமானத்தை இயக்குவதற்கும் பராமரிப்பதற்கும் முழுமையாக ஆயத்தமாக இருப்பதை உறுதி செய்வதற்காக மூன்று மாத பயிற்சி திட்டத்தை அமெரிக்க அரசு ஊழியர்கள் நடத்துவார்கள்.

இந்த விமானம் திருகோணமலை சீனக்குடாவில் உள்ள கடல்சார் ரோந்துப் படை 3 இல் இணைவதற்கு முன்னர் இரத்மலானை விமானப்படை தளத்தில் மேலதிக பயிற்சி மற்றும் ஒருங்கிணைப்புக்கு உட்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம்
இலங்கை

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேதனம் உயர்த்தப்பட்டுள்ளதா?

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இன்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...

Wei Huaxiang
இலங்கை

புதிய சீனத்தூதுவர் இலங்கைக்கு விஜயம்.

இலங்கைக்கான புதிய சீனத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள வெய் ஹுவாசியாங் (Wei Huaxiang) தமது பதவியைப் பொறுப்பேற்பதற்காக...

வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்
இலங்கை

முல்லைத்தீவில் திடீரென வாடிகளுக்குள் புகுந்த கடல்நீர்!

இன்று காலை, திடீரென அதிகரித்த கடற்சீற்றம், முல்லைத்தீவு மாவட்டத்தில் காரணமாக கடல்நீர் கரையைத் தாண்டி மீனவர்களின்...

Eelam Refugees
இலங்கை

இந்தியாவிலிருந்து நாடு திரும்பும் அகதிகளுக்கான அறிவித்தல்!

யுத்த காலத்தில் இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் இந்தியாவுக்கு இடம்பெயர்ந்து, தற்போது ஐக்கிய நாடுகள் அகதிகள் உயர்ஸ்தானிகராலயத்தின்...