5 12
இலங்கைசெய்திகள்

ஏற்கனவே வெற்றி உறுதியாகியுள்ளது – அனுரகுமார

Share

ஏற்கனவே வெற்றி உறுதியாகியுள்ளது – அனுரகுமார

ஜனாதிபதி தேர்தலில் தமது வெற்றி உறுதியாகியுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தமது வெற்றி உறுதியாகியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொதுமக்கள் பாரியளவில் தமக்கு ஆதரவளித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பிடத்தக்களவு இடைவெளியில் தாம் வெற்றியீட்டுவது உறுதியாகியுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2020ஆம் ஆண்டில் மக்கள் வழங்கிய ஆணையின் பிரகாரம் நாடாளுமன்றில் பல உறுப்பினர்கள் செயற்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

போட்டியிட்ட கட்சியை விட்டு தாவி வேறும் கட்சிக்கு ஆதரவளித்து வருவதாகவும் கொள்கையற்ற அரசியல்வாதிகள் எனவும் தெரிவித்துள்ளார்.

எனவே ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் உடன் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டு வலுவான அமைச்சரவை உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்றிலும் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மை ஆசனங்களை கைப்பற்றும் என அனுரகுமார திஸாநாயக்க நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 27
செய்திகள்விளையாட்டு

ஐபிஎல் 2026: சன்ரைசர்ஸை வீழ்த்தி நடப்பு சாம்பியன் பெங்களூரு அணி அபார வெற்றி!

ஐபிஎல் 2026 தொடரின் தொடக்க ஆட்டத்தில், நடப்பு சாம்பியனான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி,...

Untitled 26
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மின்சாரக் கட்டணத் திருத்தம்: பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் இறுதி முடிவு நாளை!

இலங்கையில் எதிர்வரும் ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலப்பகுதிக்கான மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தனது...

Untitled 25
உலகம்செய்திகள்

ஆந்த்ரோபிக் நிறுவனத்தின் புதிய ஏஐ இரகசியங்கள் கசிவு: சைபர் பாதுகாப்பு நிறுவனங்களுக்குப் பெரும் சவால்!

உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு (AI) நிறுவனமான ஆந்த்ரோபிக் (Anthropic), உருவாக்கி வரும் தனது அடுத்த...

01 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சீன ஆய்வுக்கப்பல் ஊழியருக்கு அவசர சிகிச்சை: மனிதாபிமான அடிப்படையில் உதவிய இலங்கை கடற்படை!

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் (EEZ) நங்கூரமிட்டிருந்த சீன ஆய்வுக்கப்பலான ‘ஷி யான் 6’ (Shi...