3 8
இலங்கைசெய்திகள்

யார் வென்றாலும் 3 மாதங்களில் தகுதி நீக்கம்! புதிய ஜனாதிபதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

Share

யார் வென்றாலும் 3 மாதங்களில் தகுதி நீக்கம்! புதிய ஜனாதிபதி தொடர்பில் வெளியான அறிவிப்பு

தேர்தலில் போட்டியிடுகின்ற பிரதான கட்சிகளின் வேட்பாளர்களில் எவர் வென்றாலும் இரண்டு மூன்று மாதங்களில் அவர்கள் தகுதி நீக்கம் செய்யப்படுவார்கள் என ஜனாதிபதி வேட்பாளர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களிற்கு பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் சம்பள உயர்வு குறித்த வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர். இது இலஞ்சம் போன்றது. இதன் காரணமாக அவர்கள் தகுதிநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வு குறித்து வாக்குறுதிகளை வழங்கியுள்ளனர்.

உணவு வழங்குவது தகுதிநீக்கம் செய்யப்படக்கூடிய குற்றம் என்றால், அரசாங்க ஊழியர்களிற்கு சம்பள உயர்வை வழங்குவதாக தெரிவிப்பது இலஞ்சம் வழங்குவதை போன்றது.

இது தேர்தல் விதிமுறைகளை மீறிய செயல் என முறைப்பாடு அளிக்கப்பட்டால், பிரதான கட்சிகளின் வேட்பாளர்கள் தகுதிநீக்கப்படலாம்.

ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர்களின் செலவுகள் குறித்த ஆதாரங்களை சேகரித்து வருகின்றோம், தேர்தல் ஆணைக்குழுவுடன் இது குறித்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளோம்.

வேட்பாளர்களின் சொத்துக்கள் குறித்த பிரகடனம் குறித்து இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொள்ளும், இதன் காரணமாக அவர்கள் கைதுசெய்யப்படலாம் என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....