2 5
இலங்கைசெய்திகள்

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

Share

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மூன்று பிரதான வேட்பாளர்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புடன், ஜனாதிபதி ஒருவர், நிறைவேற்று ஜனாதிபதியாக மாற்றப்பட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு தனிநபரிடம் அதிக அதிகாரத்தை குவிக்கிறது

இதன் காரணமாக ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை துஸ்பிரயோகம் செய்யப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலேயே தனது முதன்மையான கவனம் செலுத்தப்படும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
Mahara Prison
இலங்கை

மஹர சிறைச்சாலையில் ஒருவர் பலி – பலர் படுகாயம்.

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட பதற்ற நிலைமையின் போது காயமடைந்தவர்களில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த 6...

Featuredc
இலங்கை

மஹர சிறையில் ஏற்பட்ட மோதல் – ராகமயில் பொலிஸ் ஊரடங்கு.

ராகம பொலிஸ் எல்லைக்குள் மறு அறிவிப்பு வரும் வரை பொலிஸ் ஊரடங்கு உடனடியாக நடைமுறைபடுத்தப்பட்டுள்ளது. மஹர...

sgdh
இலங்கை

தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட போதைப்பொருட்கள்.

பெங்கொக் நகரிலிருந்து கடந்த ஜூலை 24ஆம் திகதி இலங்கைக்கு வந்தடைந்த விமானமொன்றில், பரிசுப் பொருட்கள் அடங்கிய...

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி
இலங்கை

காட்டு யானை தாக்கியதில் ஒருவர் பலி.

காட்டு யானை தாக்கியதில் தும்பகல்ல, குடாஓய பகுதியில் பதுளுவெலவை சேர்ந்த 45 வயதுடைய ஒருவர் உயிரிழந்துள்ளார்....