33 1
இலங்கைசெய்திகள்

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்

Share

பிரித்தானியாவில் ஈழத்தமிழ் பெண் நாடாளுமன்ற உறுப்பினரை சந்தித்த சிறீதரன்

கிளிநொச்சி (Kilinochchi) நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் (S.Sritharan) தொழிற்கட்சி (Labour Party) உறுப்பினரும் ஈழத்தமிழ் நாடாளுமன்ற உறுப்பினருமான உமா குமரனை சந்தித்துள்ளார்.

சிறீதரன் பிரித்தானியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையிலே இச்சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாட்டு அரசியலின் தற்கால போக்கு தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் உமா குமரன் (Uma Kumaran) எக்ஸ் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

குறித்த பதிவில், “வடக்கு மாகாண நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றத்திற்கு வரவேற்பதில் பெருமையடைகிறேன்.

எனது தேர்தலுக்குப் பிறகு நான் பெற்ற முதல் வாழ்த்துக்களில் அவருடைய வாழ்த்துக்களும் அடங்கும்.

ஐக்கிய இராச்சியம், இலங்கை மற்றும் உலகெங்கிலும் உள்ள தமிழர்களுக்கு தொழிற்கட்சியின் ஆதரவை நான் மீண்டும் உறுதிப்படுத்தினேன். ஒன்றாக, நீதிக்கான எங்கள் போராட்டத்தை தொடர்வோம்” என குறிப்பிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...