18 26
இலங்கைசெய்திகள்

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – திடமான நம்பிக்கையில் மகிந்த தரப்பு

Share

இலங்கையின் அடுத்த ஜனாதிபதி நாமல் – திடமான நம்பிக்கையில் மகிந்த தரப்பு

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் 35 சதவீத வாக்குகளை பெற்று நாமல் ராஜபக்ஷ வெற்றிபெற முடியும் என இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக தெரிவித்துள்ளார்.

35 சதவீதமான மக்கள் நிச்சயமாக “மகிந்த சிந்தனை” கொள்கையுடன் இருப்பார்கள் எனவும் அதற்கமைய, நாமல் ராஜபக்ஷவுக்கு அந்தளவு வாக்குகள் கிடைக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.

இத்தேர்தலில் எந்தவொரு வேட்பாளரும் ஐம்பது வீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற முடியாது. 35 வீத வாக்குகளைப் பெறும் வேட்பாளர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில் ஜனாதிபதி வேட்பாளரான நாமல் ராஜபக்ச நான்கு சதவீத வாக்குகளை பெறுவார் என எதிர்வு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Share
தொடர்புடையது
25 68f7986211c31
செய்திகள்இலங்கை

வவுனியா மாநகர சபை செயற்பாடுகளுக்கு இடைக்காலத் தடை: மேலதிக ஆசனப் பிரச்சினைக்கு ஜனாதிபதி சட்டத்தரணி ஆஜர்!

வவுனியா மாநகர சபையின் செயற்பாடுகளுக்கு மேல்முறையீட்டு நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 19ஆம் திகதி வரை இடைக்காலத்...

articles2FFRfdZpigOe1FxwuUE5O6
இலங்கைசெய்திகள்

இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ். மற்றும் கிளிநொச்சியில் கைது!

கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கு: இஷாரா செவ்வந்தியுடன் தொடர்புடைய நால்வர் யாழ், கிளிநொச்சியில் கைது! ஒழுங்கமைக்கப்பட்ட...

25 68f843287a66a
செய்திகள்இலங்கை

வடக்கு முதலமைச்சர் வேட்பாளர் தேர்வில் தேசிய மக்கள் சக்தி தீவிரம் – தமிழரசுக் கட்சியின் சுமந்திரனும் தயார்!

வரும் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களாகக் களமிறங்கக்கூடிய நபர்கள் தொடர்பில் பிரதான கட்சிகள் தீவிர...

IMG 0949
செய்திகள்உலகம்

தென் கொரியாவில் வசிக்கும் தெவிநுவர பிரதான கடத்தல்காரர்: போதைப்பொருள் வலையமைப்பு குறித்து தீவிர விசாரணை!

மாத்தறை – தெவிநுவர பிரதேசத்தில் செயல்படுவதாகக் கூறப்படும் போதைப்பொருள் வலையமைப்பு தொடர்பாக விசாரணை அதிகாரிகள் தற்போது...