27 19
இலங்கைசெய்திகள்

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

Share

கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் நிலைமைகளை ஆராயும் இந்தியாவின் அஜித் தோவல்

சிஎஸ்சி என்ற கொழும்பு பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக இலங்கை வந்துள்ள இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் (Ajit Doval), தற்போது இலங்கையில் தங்கியுள்ளார்

இரண்டு நாள் பயணமாக அவர் நேற்று இலங்கையை வந்தடைந்தார்.

இந்தியா, மொரீசியஸ், மாலைதீவு, இலங்கை மற்றும் பங்களாதேஷ் ஆகியவை சிஎஸ்சி இன் உறுப்பு நாடுகளாக உள்ளன.

இந்தியப் பெருங்கடலில் இந்தியா தனது சொந்த மூலோபாயக் கவலைகளை கருத்திற்கொண்டு, கடல்சார் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் இணையப் பாதுகாப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்த மாநாட்டை கையாள்கிறது.

இந்தநிலையில், இந்த மாநாட்டில், தற்போதைய பாதுகாப்பு நிலைமையின் முன்னேற்றத்தை மதிப்பாய்வு செய்து பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதறான உத்திகள் பற்றி விவாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இ;ந்தியாவின் தோவல் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க உட்பட்ட முக்கிய ஜனாதிபதி வேட்பாளர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரிவி;க்கப்பட்டுள்ளது.

 

Share
தொடர்புடையது
சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட
இலங்கை

சிறைக்கு அழைத்து செல்லப்பட்ட பூஜித் ஜயசுந்தர மற்றும் முன்னாள் ஹேமசிறி பெர்னாண்டோ.

உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படவுள்ளதாக புலனாய்வு தகவல்கள் கிடைத்திருந்தபோதிலும், அதனைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமை,...

Shooting 5
இலங்கை

சற்றுமுன் மிரிஸ்ஸ பகுதியில் துப்பாக்கிசூடு.

இன்றைய தினம், மிரிஸ்ஸ, சந்திப் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்...

mnnnn
இலங்கை

தொழிலாளி மீது சரிந்து வீழ்ந்த மண்மேடு.

கண்டி, வில்லியம் கொபல்லவ மாவத்தையில் இன்று நண்பகல் 11.00 மணியளவில் வில்லியம் கொபல்லவ மாவத்தையிலுள்ள இடமொன்றில்...

sri lanka floo
இலங்கை

நாட்டில் மழை கிடைக்கவுள்ள பிரதேசங்கள் – வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிவிப்பு.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால், அடுத்த 36 மணித்தியாலங்களுக்கு அமுலாகும் வகையில் விசேட வானிலை முன்னறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது....