16 26
இலங்கைஉலகம்செய்திகள்

லோர்ட்ஸ் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு கிடைத்த பெருமை

Share

லோர்ட்ஸ் மைதானத்தில் மஹேல ஜயவர்தனவிற்கு கிடைத்த பெருமை

உலகின் சிறந்த கிரிக்கட் மைதானங்களில் ஒன்றாக போற்றப்படும் இங்கிலாந்தின் லோர்ட்ஸ் மைதானத்தில் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் மஹேல ஜயவர்தன கௌரவிக்கப்பட்டுள்ளார்.

மஹேல ஜயவர்தன, இலங்கை – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கட் போட்டியை மணி அடித்து நேற்றைய தினம் (29.08.2024) ஆரம்பித்து வைத்துள்ளார்.

லோர்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு 5 நிமிடங்கள் முன் இவ்வாறு மணி அடிக்கப்பட்டு ஆரம்பிக்கப்படும்.

உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்கள் லோர்ட்ஸில் இவ்வாறு மணி அடித்துள்ளனர்.

இலங்கை அணியின் முன்னாள் நட்சத்திர வீரர்களான அர்ஜுன ரணதுங்க, குமார் சங்கக்கார, சனத் ஜயசூரிய, சமிந்த வாஸ், சிதத் வெத்தமுனி, மார்வன் அத்தபத்து ஆகியோரும் நற்குண முன்னேற்ற அமைப்பின் ஸ்தாபகர் குஷில் குணசேகரவும் லோர்ட்ஸ் மைதானத்தில் மணி அடித்து போட்டியை ஆரம்பித்த பெருமைக்குரிய இலங்கையர்களாவர்.

போட்டி ஆரம்பிக்கப்பட உள்ளதை அறிவிக்கும் வகையில் இந்த மணி அடிக்கப்படுகின்றது.

Share
தொடர்புடையது
Untitled 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை – மலேசியா இடையே புதிய வான்வழி இணைப்பு: பாட்டிக் ஏர் தனது சேவையைத் தொடங்கியது!

மலேசியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான விமான இணைப்பை வலுப்படுத்தும் ஒரு புதிய மைல்கல்லாக, பாட்டிக் ஏர் மலேசியா...

Untitled 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தொட்டகமுவ மும்முறை கொலை வழக்கு: 18 ஆண்டுகளின் பின் நான்கு சந்தேக நபர்கள் விடுதலை!

கடந்த 2006-ஆம் ஆண்டு பாலப்பிட்டிய, தொட்டகமுவ பகுதியில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் சுட்டுக்கொல்லப்பட்ட...

Untitled 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

யக்கல கட்சி அலுவலக விவகாரம்: ஜே.வி.பி-யிடம் இருந்து முன்னிலை சோசலிசக் கட்சியிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவு!

யக்கல (Yakkala) பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோசலிசக் கட்சியின் (FLSP) அலுவலகத்தை ஜனதா விமுக்தி பெரமுன...

Untitled 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தலைவர் சரத் கணேகோடா ராஜினாமா: புதிய பதில் தலைவர் நியமனம்!

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் (SriLankan Airlines) மற்றும் ஸ்ரீலங்கன் கேட்டரிங் ஆகிய நிறுவனங்களின் தலைவராகப் பணியாற்றி வந்த...