8 41 scaled
உலகம்செய்திகள்

விலை உயரும்… உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய நுகர்வோர் மீது புதிய மிரட்டலை விடுத்த ரஷ்யா

Share

விலை உயரும்… உக்ரைன் தொடர்பில் ஐரோப்பிய நுகர்வோர் மீது புதிய மிரட்டலை விடுத்த ரஷ்யா

உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு போக்குவரத்து தொடர்பில் ஒப்பந்தத்தை நீட்டிக்க உக்ரைன் மறுக்கும் என்றால் ஐரோப்பிய நுகர்வோர் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.

உக்ரைன் வழியாக ரஷ்ய எரிவாயு போக்குவரத்து தொடர்பில் ஒப்பந்தமானது எதிர்வரும் டிசம்பர் 31ம் திகதியுடன் முடிவுக்கு வருகிறது. ஆனால் போர் முடிவுக்கு வராமல் ரஷ்யா உடனான எந்த ஒப்பந்தமும் நீட்டிக்க வாய்ப்பில்லை என்றே உக்ரைன் தொடர்ந்து கூறி வருகிறது.

இந்த நிலையில், ரஷ்ய செய்தித்தொடர்பாளர் Dmitry Peskov தெரிவிக்கையில், உக்ரைன் ஒப்பந்தத்தை நீட்டிக்கவில்லை என்றால் ரஷ்யாவால் மாற்று வழிகளைக் கண்டுபிடிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உக்ரைன் மறுக்கும் என்றால் துருக்கியை நாட ரஷ்யா திட்டமிட்டுள்ளது. ஐரோப்பிய நுகர்வோருக்கு மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தவே உக்ரைன் திட்டமிட்டு வருவதாகவும் Dmitry Peskov தெரிவித்துள்ளார்.

ஆனால், உக்ரைனின் பிடிவாதத்தால் ஐரோப்பா எரிவாயுவுக்காக அதிக தொகையை செலவிட நேரிடும், மிகவும் மலிவான ரஷ்ய எரிவாயுவுக்கு பதிலாக அமெரிக்காவை நாடும் நிலை ஏற்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே, உக்ரைன் வழியாக பெரும்பாலான ரஷ்ய எரிவாயு பெறுநர்கள் தெரிவிக்கையில், உக்ரைனுக்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான ஒப்பந்தம் காலாவதியாகும் போது இந்த ஆண்டின் இறுதியில் எரிவாயு வரத்து நிறுத்தப்படுவதை எதிர்கொள்ள தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால் ரஷ்யா மாற்று வழியாக துருக்கி, பல்கேரியா, செர்பியா அல்லது ஹங்கேரி ஆகிய நாடுகளை நாடும் என்றே கூறப்படுகிறது. இருப்பினும், இந்த வழித்தடங்களின் திறன் குறைவாக உள்ளது.

மேலும், ஐரோப்பிய ஒன்றியமும் உக்ரைனும் இந்த விவகாரத்தில் ரஷ்யா உடனான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க அஜர்பைஜானை கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
1529934317 gun gunshot 2
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

பத்தரமுல்லையில் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு! – ஜீப் வாகனத்தில் இருந்த தம்பதியினர் மர்மமான முறையில் சுட்டுக்கொலை!

கொழும்பு – பத்தரமுல்லை, அக்குரேகொட பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற திட்டமிட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் தம்பதியினர்...

25 679d968d808df
இலங்கைசெய்திகள்

18 ஆண்டுகால நீதிப் போராட்டம்: வஸ்கடுவ கொலை வழக்கில் மூவருக்கு மரண தண்டனை!

குடா வஸ்கடுவ பகுதியில் 2008 ஆம் ஆண்டு இடம்பெற்ற நபர் ஒருவரின் படுகொலை தொடர்பான வழக்கில்,...

26 69858a214d488
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

இரசாயனப் பொருளை சுவாசித்த 19 பேர் பாதிப்பு! – மொரட்டுவை பாடசாலை மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மொரட்டுவை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் இன்று மேற்கொள்ளப்பட்ட ஆய்வக சோதனையின் போது, வெளியேறிய இரசாயனப்...

1770972444 seine 6
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

ஜனாதிபதி செயலகத்திற்கு முன் 9-வது நாளாக மீனவர் போராட்டம்! – தீர்வு காண ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பு!

கொழும்பில் உள்ள ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக, கொளுத்தும் வெயிலையும் பாரிய மழையையும் பொருட்படுத்தாது மீனவர்கள் முன்னெடுத்து...