4 41
இலங்கைசெய்திகள்

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச

Share

வறிய குடும்பங்களுக்கு 20000 ரூபா கொடுப்பனவு வழங்கப்படும்! சஜித் பிரேமதாச

நாட்டின் அனைத்து வறிய குடும்பங்களுக்கும் மாதாந்தம் சுமார் இருபதாயிரம் ரூபா வழங்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர், ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

சேருவாவில பகுதியில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் தமது ஆட்சியின் கீழ் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளதாக தெரிவித்துள்ளார்.

சனசவிய, சமுர்த்தி மற்றும் அஸ்வெசும உள்ளிட்ட சமூக நலன்புரித் திட்டங்களின் நல்ல பண்புகள் அனைத்தையும் உள்ளடக்கிய புதிய திட்டம் உருவாக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த திட்டங்களில் காணப்படும் குறைபாடுகள் நீக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த புதிய திட்டத்தின் கீழ் இருபத்து நான்கு மாதங்களில் வறுமையை ஒழிக்க முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Share
தொடர்புடையது
24 6719ef7b673a7
அரசியல்செய்திகள்

டயானா கமகே கடவுச்சீட்டு விசா வழக்கு: மேலதிக சாட்சியங்களுக்காக பிப். 16க்கு ஒத்திவைப்பு!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே மீது கடவுச்சீட்டு மற்றும் விசாக்கள் தொடர்பாகக் குற்றப் புலனாய்வுத்...

Waqf Board Donates Rs 10 Million 1170x658 1
இலங்கைசெய்திகள்

அனர்த்தத்தில் சேதமடைந்த மதத் தலங்களைப் புனரமைக்க: வக்ஃப் சபை 10 மில்லியன் நிதி நன்கொடை!

கடந்த காலத்தில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தத்தினால் சேதமடைந்த மதஸ்தலங்களை மீண்டும் கட்டியெழுப்பும் பணிகளுக்காக, வக்ஃப் சபையினால்...

Untitled
அரசியல்இலங்கைசெய்திகள்

கிராம உத்தியோகத்தர்களுக்கு எதிரான பொதுவான குற்றச்சாட்டுகள் நிறுத்தப்பட வேண்டும் – இம்ரான் மகரூப் கோரிக்கை!

நாட்டிலுள்ள ஒட்டுமொத்த கிராம உத்தியோகத்தர்களுக்கும் மனஅழுத்தம் ஏற்படும் வகையில் செய்திகள் வெளியிடப்படுவதை நிறுத்த வேண்டும் என்றும்,...