25 15
இலங்கைசெய்திகள்

தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்

Share

தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து வந்த யுவதி மர்மமான முறையில் மரணம்

கம்பஹா, நிட்டம்புவ பிரதேசத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணி புரிந்து வந்த யுவதி ஒருவர் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

டட்லி சேனநாயக்க மாவத்தையில் வசித்து வந்த 21 வயதுடைய ராஜபக்ஷ ஆராச்சிலாகே செனாலி ராஜபக்ஷ என்பவரே உயிரிழந்துள்ளார்.

இந்த யுவதி நேற்று காலை வீட்டில் ஏற்பட்ட அவசர சுகயீனம் காரணமாக வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும் அந்த பெண் ஏற்கனவே இறந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்த யுவதியின் பிரேத பரிசோதனை நேற்று வரக்காபொல மரண விசாரணை அதிகாரி விமலசிறி ராஜபக்ஷ முன்னிலையில் இடம்பெற்றது.

எங்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். உயிரிழந்தவர் மூத்த மகள் என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளனர். நிட்டம்புவ தனியார் வங்கியொன்றில் வேலைக்கு சென்று கொண்டிருந்தார்.

நானும் எனது கணவரும் வியாபாரம் செய்கிறோம். மகளுக்கு எந்த நோயும் இல்லை. பிறந்த நாளில் இருந்து இன்று தான் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

நேற்று முன்தினம் காலை 6.30 மணியளவில் வங்கி ஊழியர்களுடன் மகள் நிகழ்வு ஒன்றிற்கு சென்றார். இரவு 8.30 மணியளவில் வீட்டிற்கு வந்தார். வந்து குளித்துவிட்டு மாடிக்குச் சென்றார்.

அதிகாலை 3 மணியளவில், என் மகள் மாடியில் இருந்து இறங்கி குளியலறைக்கு செல்வதை பார்த்தேன். அதன்பிறகு நாங்கள் இருவரும் தூங்கிக்கொண்டிருந்த அறைக்கு என் மகள் வந்தார், எனக்கு சோர்வாக இருப்பதாக கூறினார்.

உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போதிலும் அவர் உயிரிழந்து விட்டார். எனினும் மரணத்திற்கான காரணம் என்ன என்று இதுவரையிலும் தெரியவில்லை என உயிரிழந்த யுவதியின் தாயார் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
images 2 2
இலங்கைசெய்திகள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இன்று இரவு முதல் மழை அதிகரிக்கும்!

நாட்டில் வடகீழ் பருவப் பெயர்ச்சிக்குரிய காலநிலை படிப்படியாக ஆரம்பிப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக,...

25 6935546f3239d
இலங்கைசெய்திகள்

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிச் சிவலிங்கம்: தற்போதுள்ள நிலையிலேயே பேண உயர் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் சர்ச்சைக்குரிய வகையில் இடமாற்றம் செய்யப்பட்ட சிவலிங்கத்தை, தற்போது தற்காலிகமாக வைக்கப்பட்டுள்ள நிலையிலிருந்து...

ISBS SRILANKA PRISON
இலங்கைசெய்திகள்

பூஸா சிறைச்சாலை மோதல்: கைதிகள் நடத்திய தாக்குதலில் சிறைச்சாலை அத்தியட்சகர் காயம்!

பூஸா உயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் கைதிகளை இடமாற்றம் செய்ய முற்பட்டபோது ஏற்பட்ட மோதலில் சிறைச்சாலை அத்தியட்சகர்...

images 1 2
இலங்கைசெய்திகள்

அரசியல் தீர்வு உள்ளிட்ட தமிழ் மக்களின் விவகாரங்களில் அரசாங்கம் ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுக்கவில்லை – மன்னார் ஆயர்!

புதிய அரசாங்கம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு போன்ற முக்கிய விடயங்களில் இதுவரை ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை...