24 15
இலங்கைசெய்திகள்

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

Share

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை முன்னிட்டு இவ்வாறு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.

எனினும், தேர்தல்களை முன்னிட்டு முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Kerala Drugs
இலங்கை

எரித்து அழிக்கப்பட கேரள கஞ்சா.

கடந்த காலங்களில் கடல் மார்க்கமாக கொண்டு வரப்பட்ட கஞ்சா பொதிகள் வெவ்வேறு திகதிகளில் கைப்பற்றப்பட்ட நிலையில்...

question mark
இலங்கை

செல்வந்தர்களுக்கு ஏற்பட்டுள்ள திடீர் நெருக்கடி.

திடீரெனப் பணக்காரர்களாகியுள்ள சந்தேகத்திற்கிடமான நபர்கள் குறித்த தகவல்களை வழங்குமாறு பொது மக்களை காவல்துறையினர் அண்மையில் கோரியிருந்த...

Gotabaya Rajapaksa 24
இலங்கை

கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கிய நெருங்கிய உறவினர்!

கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வுப் பிரிவினால் கோட்டாபய ராஜபக்ச மற்றும் சுகீஸ்வர பண்டார ஆகியோருக்கு எதிராக...

dengue original 1
இலங்கை

டெங்கு மரணங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு – பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் உயர்வு.

அண்மையில், தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையின் பிரகாரம், நாட்டில் பதிவான டெங்கு மரணங்களின்...