24 15
இலங்கைசெய்திகள்

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

Share

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரிப்பு!

நாட்டில் பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாக அகில இலங்கை பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தின் தலைவர் தினேஸ் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

தேர்தல்களை முன்னிட்டு இவ்வாறு பட்டாசு உற்பத்தி அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதுடன், இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் சில தேர்தல்கள் நடைபெறவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

நத்தார் பண்டிகை மற்றும் புத்தாண்டு நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை முன்னிட்டு பொதுவாக ஆகஸ்ட் மாதம் பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்படும்.

எனினும், தேர்தல்களை முன்னிட்டு முன்கூட்டியே பட்டாசு உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கம்பஹா, காலி, கண்டி மற்றும் குருணாகல் மாவட்டங்களிலும் பட்டாசு உற்பத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered 12
இலங்கைசெய்திகள்

கந்தளாய் சூரியபுர பகுதியில் லொறி விபத்து

கந்தளாய் சூரியபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமகிபுர பகுதியில் ஒரு லொறி வீதியை விட்டு விலகி ஆற்றில்...

Untitled 1 Recovered Recovered 11
இலங்கைசெய்திகள்

கொழும்பில் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ள விசேட போக்குவரத்து திட்டம்!

போரா மாநாட்டை முன்னிட்டு கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். போரா மாநாடு...

Untitled 1 Recovered Recovered 9
இலங்கைசெய்திகள்

அதிகரிப்பைப் பதிவு செய்த கொழும்பு பங்குச் சந்தை

கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது. அதன்படி, இன்றையதினம்(24)...

Untitled 1 Recovered Recovered 8
இலங்கைசெய்திகள்

திடீரென இஸ்ரேலை எச்சரித்த ட்ரம்ப்!

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தக்கூடாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்....