18 21
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தல் குறித்த சமூக ஊடக கருத்துக் கணிப்புகளுக்கு தடை

Share

ஜனாதிபதி தேர்தல் குறித்த சமூக ஊடக கருத்துக் கணிப்புகளுக்கு தடை

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் சமூக ஊடகங்களின் வாயிலாக மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்களுக்கு தடை விதிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

தேசிய தேர்தல் ஆணைக்குழு இந்த விவகாரம் தொடர்பில் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயம் தொடர்பில் இந்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் ஆணைக்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ளது.

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல் ரட்நாயக்க இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இந்த கருத்துக் கணிப்புக்கள் மூலம் சில வேட்பாளர்களுக்கு பாதக நிலைமை ஏற்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த கருத்தக் கணிப்புக்களை மேற்கொள்ளும் தரப்புக்கள் யார் என்பது குறித்து கண்டறியும் நோக்கில் தேர்தல் ஆணைக்குழு ஆய்வு நடத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆய்வின் அடிப்படையில் கருத்துக் கணிப்புக்களை தடை செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலத்திரனியல் அல்லது அச்சு ஊடகங்களில் நடத்டதப்படும் கருத்துக் கணிப்புக்களை ரத்து செய்வது இலகுவானது என்ற போதிலும், சமூக ஊடகங்களில் மேற்கொள்ளப்படும் கருத்துக் கணிப்புக்களை கட்டுப்படுத்துவது சவால் மிக்கது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
பேராசிரியர் சரத் அபேகோன்
இலங்கை

ஜனாதிபதிக்கு பறந்த பதவி விலகல் கடிதம்.

தமது பதவியிலிருந்து விலகுவதாக மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன், பதவி விலகல் குறித்த...

are 2
இலங்கை

முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கைது.

முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான ஜெயலத் பண்டார திசாநாயக்க, நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பாக கைது...

j poretest d
இலங்கை

மாநகர சபைக்குள் நுழைய வேண்டிய நிலை உருவாகும் – அதற்கு முன் விரைந்து நடவடிக்கை எடுங்கள்!

யாழ்ப்பாணம் – காக்கை தீவு மக்கள் மாநகர சபைக்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு...

arested 1
இலங்கை

வெளிநாட்டில் இருந்து வருகை தருவோரை இலக்குவைத்து நடத்தப்படும் சம்பவம்.

திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் நேற்றைய தினம் யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்....