24 14
இலங்கைசெய்திகள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை! கர்தினால்

Share

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை! கர்தினால்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் சந்தித்த போதிலும் எந்த ஒரு வேட்பாளருக்கும் கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை ஆதரவளிக்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கர்தினலின் சார்பில் அவரது ஊடகப் பேச்சாளர் சிறில் காமினி பெர்னாண்டோ அருட்தந்தை இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சிலர் கர்தினலை சந்திப்பதற்கு கோரிக்கை விடுத்துள்ளதாகவும் அவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப எவ்வித தெரிவுகளும் இன்றி அவர்களை சந்தித்து வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வேட்பாளர்களை சந்தித்த மாத்திரத்தில் அவர்களுக்கு ஆதரவு வழங்குவதாக அர்த்தப்படாது என அவர் தெரிவித்துள்ளார்.

கத்தோலிக்க சபையோ கர்தினலோ எந்த ஒரு அரசியல் தரப்பிற்கும் ஆதரவினை வெளிப்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு வேட்பாளருக்கும் ஆதரவில்லை! கர்தினால் | We Will Not Endore Any Candidate

எனவே எந்தக் கட்சிக்கு ஆதரவளிப்பது என்பது குறித்து மக்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் புத்திசாதூரியமாக அந்த தீர்மானத்தை எடுக்க வேண்டிய பொறுப்பு பொதுமக்களை சாரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதுவே கத்தோலிக்க சபையினதும் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகையினதும் நிலைப்பாடு என அருட்தந்தை சிறில் காமினி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 161
செய்திகள்இலங்கைபிராந்தியம்

விபத்துகளால் 713 பேர் பலி: வாகன ஓட்டுநர்களுக்கு பொலிஸார் கடும் எச்சரிக்கை!

தற்போது நிலவி வரும் பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்துவதையும், கவனக்குறைவாகச் செயல்படுவதையும் தவிர்க்குமாறு இலங்கை...

world 160
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் நிகழ்ந்த விபத்துக்கள் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள்: பொலிஸாரின் அதிரடி சோதனைகள்!

இலங்கையின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில மணிநேரங்களில் இடம்பெற்ற விபத்துக்கள் மற்றும் பொலிஸ் சோதனைகளில் பலர்...

world 159
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பட்டாசு வெடிக்கும் போது அவதானம் செலுத்துமாறு சுகாதார அமைச்சு அறிவுறுத்தல்!

சித்திரைப் புத்தாண்டு கொண்டாட்டங்களின் போது எதிர்பாராத விதமாக இடம்பெறும் பட்டாசு விபத்துகளைத் தடுப்பது குறித்து சுகாதார...

world 158
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கல்கிசையில் மோதல்: இலங்கை பெண்ணைத் தாக்கிய உக்ரைன் பெண் விளக்கமறியலில்!

கல்கிசையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றிற்கு முன்பாக கடந்த 12ஆம் திகதி இரவு இடம்பெற்ற மோதல் சம்பவம்...