14 18
இலங்கைசெய்திகள்

அனுர ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்கமாட்டோம்: விஜித ஹேரத் உறுதி

Share

அனுர ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்கமாட்டோம்: விஜித ஹேரத் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவானதும் எதிரிகளை தாக்க மாட்டோம் என கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தோல்வியடையும் எந்தவொரு வேட்பாளரின் ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தப்படாது என அவர் உறுதியளித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி வெற்றியீட்டியதன் பின்னர் எதிரிகள் தாக்கப்படுவார்கள் எனவும், எதிரிகள் பழிவாங்கப்படுவார்கள் எனவும் சிலர் பிரசாரம் செய்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் அவ்வாறான எந்தவொரு பழிவாங்கல் செயற்பாடுகளும் இடம்பெறாது என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி மிகவும் அமைதியான முறையில் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து செல்வதாகத் குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலில் வெற்றியீட்டியதன் பின்னர் மிகவும் அமைதியான முறையில் நாம் எமது வெற்றியைக் கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளார்.

போட்டி ஆரம்பிக்கும் போது கைலாகு செய்தோம் போட்டியின் நிறைவிலும் எமது வெற்றியுடன் கைலாகு செய்வோம் என விஜித ஹேரத் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

Share
தொடர்புடையது
Untitled 13
செய்திகள்இலங்கைபிராந்தியம்

சித்திரை புத்தாண்டு பாதுகாப்பு: நாடு முழுவதும் 10,000 பொலிஸார் விசேட கடமையில்!

எதிர்வரும் சித்திரை புத்தாண்டை முன்னிட்டுப் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில், நாடு தழுவிய ரீதியில் விசேட...

Untitled 12
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் விநியோகம் உறுதி: பெட்ரோலிய கூட்டுத்தாபனம் உத்தியோகபூர்வ அறிவிப்பு!

இலங்கைக்குத் தேவையான எரிபொருளை ரஷ்யாவிடமிருந்து பெற்றுக்கொள்வது தற்போது உத்தியோகபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம்...

Untitled 10
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொச்சிக்கடையில் சட்டவிரோத டீசல் கையிருப்பு: 35 வயதுடைய நபர் கைது!

கொழும்பு பிரதான வீதியில் அமைந்துள்ள கொச்சிக்கடை, தலுவகொட்டுவ பகுதியில் சட்டவிரோதமான முறையில் டீசலை வைத்திருந்த 35...

Untitled 9
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையின் போதைப்பொருள் வர்த்தகத்தை இயக்கும் 5 முக்கிய சூத்திரதாரிகள்: டுபாய் மற்றும் ஐரோப்பாவிலிருந்து செயற்படுவது அம்பலம்!

இலங்கையில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்ட போதிலும், நாட்டின் ஒட்டுமொத்த போதைப்பொருள்...