33 3
இலங்கைசெய்திகள்

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

Share

அயர்லாந்து மகளிர் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இலங்கைக்கு ஆறுதல் வெற்றி

அயர்லாந்து, ஸ்டோர்மாண்டில் நடைபெற்ற மூன்றாவது ஒரு நாள் சர்வதேச மகளிர் கிரிக்கெட் போட்டியில், தொடர் வெற்றியாளரான அயர்லாந்துக்கு எதிராக இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது.

முன்னதாக இரண்டு போட்டிகளுக்கு மாறாக, போட்டியின் முதல் இரண்டு பந்துகளில் இலங்கையின் அச்சினி குலசூரிய, அயர்லாந்தின் துடுப்பாட்ட வீராங்கனைகளான சாரா ஃபோர்ப்ஸ் மற்றும் ஏமி ஹன்டரை வெளியேற்றியதால், அயர்லாந்தின் துடுப்பாட்டம் தடுமாற்றம் அடைந்தது.

தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்ததால், அயர்லாந்து அணி 46.3 ஓவர்களில் 122 ஓட்டங்களை பெற்றிருந்தபோது அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் ஏழாவது ஓவரில் தொடக்க ஆட்டக்காரர் விஸ்மி குணரத்ன ஆட்டமிழந்தபோதும், அது இலங்கை அணியை அழுத்தத்துக்கு உட்படுத்தவில்லை.

இதனையடுத்து சாமரி அதபத்துவின் 48 ஓட்டங்களையும், ஹர்சிதா சமரவிக்ரம ஆட்டமிழக்காமல் 48 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்தநிலையில் மூன்று போட்டிகளை கொண்ட இந்த தொடரில் அயர்லாந்து அணி 2க்கு 1 என்ற ரீதியில் தொடரைக் கைப்பற்றியது.

Share

Recent Posts

தொடர்புடையது
MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இன்று மகா சிவராத்திரி! – சிவாலயங்களில் குவியும் பக்தர்கள்; இரவு முழுவதும் விழித்திருந்து வழிபாடு!

ஆன்மீக ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் மிக முக்கியமான தினமாகக் கருதப்படும் மகா சிவராத்திரி விரதம் இன்று...

MediaFile 4 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

அக்குரேகொட படுகொலை: கொலையாளிகளின் கார் மீட்பு! – சட்டத்தரணியின் ‘தரப்பு மாற்றம்’ மரணத்திற்கு காரணமா?

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி மற்றும் அவரது மனைவியைப் படுகொலை செய்யப் பயன்படுத்தப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் கார், காலி...

image 1d03fce287
செய்திகள்இலங்கைபிராந்தியம்

உங்கள் கையெழுத்து உங்கள் உரிமையைக் காக்கும்’: PTA-வை நீக்கக் கோரி வடகிழக்கில் ஒரு லட்சம் கையெழுத்துப் போராட்டம்!

சர்ச்சைக்குரிய பயங்கரவாதத் தடைச்சட்டம் (PTA) மற்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்ட முன்மொழிவுகளை (ATA) முற்றாக...

image 914163dc5e
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பு ஜிந்துபிட்டியில் பயங்கரம்: சிகையலங்கார நிலையத்திற்குள் புகுந்து துப்பாக்கிச் சூடு! 

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியிலுள்ள முடியலங்கார நிலையம் (Barber Shop) ஒன்றிற்குள் நேற்றிரவு (14)...