24 11
இலங்கைசெய்திகள்

நான் தயார்: ஏனையோரும் பங்கேற்கவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கோரிக்கை

Share

நான் தயார்: ஏனையோரும் பங்கேற்கவேண்டும் என்று ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீர கோரிக்கை

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் ஆறு வேட்பாளர்களுக்கு இடையில் ‘மார்ச் 12 இயக்கம்’ ஏற்பாடு செய்யவிருக்கும் விவாதத்தில் பங்குகொள்வதற்கான அழைப்பை ‘சர்வஜன பலய’ வின் ஜனாதிபதி வேட்பாளர், தொழிலதிபர் திலித் ஜயவீர உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 6 வேட்பாளர்களுக்கு இடையேயான விவாதத்தில் பங்கேற்க மார்ச் 12 இயக்கம் விடுத்த அழைப்பை உத்தியோகபூர்வமாக ஏற்கிறேன் என்று அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம், ஜனாதிபதி பதவிக்கு வாக்களித்தால், தாம் நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கும் கொள்கைகள் குறித்த ஆக்கப்பூர்வமான உரையாடலைக் காண இலங்கையர்களுக்கு இந்த விவாதம், புதுமையான அனுபவத்தை வழங்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவாதத்தில் கலந்துகொள்ள, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச மற்றும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

எனவே, அவர்கள் அனைவரும் இந்த விவாததத்தில் பங்கேற்கவேண்டும் என்று திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 42
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கலப்பட தேங்காய் எண்ணெய் விற்பனை: கல்முனை மற்றும் சாய்ந்தமருதில் 5 வியாபாரிகளுக்கு எதிராக வழக்கு!

கல்முனை மற்றும் சாய்ந்தமருது பகுதிகளில் உணவுக்குப் பயன்படுத்தப்படும் தேங்காய் எண்ணெயில் கலப்படம் செய்து விற்பனை செய்த...

Untitled 41
செய்திகள்அரசியல்இலங்கை

பேராசிரியர் ரவீந்திரநாத் கடத்தல் வழக்கு: பிள்ளையானை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

கிழக்கு பல்கலைக்கழகத்தின் முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான வழக்கில்,...

Untitled 40
செய்திகள்இலங்கை

சர்வதேச நாணய நிதியத்துடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அதிரடிப் பேச்சு: பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து பாராட்டு!

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீடிக்கப்பட்ட கடன் வசதி வேலைத்திட்டத்தின் ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளின்...

Untitled 39
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நுவரெலியா மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு: 4 பேருக்கு மரண தண்டனை!

நுவரெலியா மேல் நீதிமன்றத்தில் நீண்டகாலமாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்த மூன்று தனித்தனி கொலை வழக்குகளின் தீர்ப்பை இன்று...