20 15
இலங்கைசெய்திகள்

இந்திய – இலங்கை தரைவழிப்பாதை குறித்து கவலை வெளியிட்டுள்ள மல்வத்த மகாநாயக்கர்

Share

இந்திய – இலங்கை தரைவழிப்பாதை குறித்து கவலை வெளியிட்டுள்ள மல்வத்த மகாநாயக்கர்

இந்தியாவுக்கும் இடையிலான உத்தேச இணைப்பு வீதி நிர்மாணிக்கப்படும் போது, ஏற்படும் பாதுகாப்பு கரிசனை தொடர்பில் மல்வத்த பீடத்தின் மகாநாயக்கர் திப்போடுவாவே சிறி சித்தார்த்த சுமங்கல தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் நேற்று(20) மல்வத்த விகாரையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே தேரர், தமது கவலையை வெளியிட்டுள்ளார்.

உத்தேச வீதியின் ஊடாக இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்வதற்கு இலங்கையில் உற்பத்திகள் எதுவும் இல்லை ஆனால் பெருமளவிலான கேரள கஞ்சா மற்றும் போதைப் பொருட்கள் நாட்டிற்குள் கடத்தப்படும் அச்சுறுத்தலை இலங்கை எதிர்கொள்ளும் எனவும் சுமங்கல தேரர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், இந்த திட்டம் விரைந்து நடைமுறைப்படுத்தப்பட மாட்டாது எனவும், திட்டத்தின் திட்டமிடல் மற்றும் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பான பேச்சுக்களுக்கு குறைந்தது இரண்டு வருடங்கள் செல்லும் எனவும் உயர்ஸ்தானிகர் விளக்கமளித்துள்ளார்.

இந்தநிலையில், குறித்த திட்டம் இலங்கைக்கு பாதகமானது என்ற தவறான கருத்தையும் அவர் மறுத்துள்ளார்.

இதேவேளை, இந்த திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதா என தேரர் எழுப்பிய கேள்விக்கு, திட்டம் தற்போது பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தப்பட்டதாக இந்திய உயர்ஸ்தானிகர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடத்தல் வர்த்தகத்தில் ஈடுபடுவோர் எப்போதும் பிரதான நுழைவாயிலைப் பயன்படுத்த மாட்டார்கள், ஆனால் ரகசிய அணுகலைப் பயன்படுத்துவார்கள் என்பதை அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.

மேலும், பௌத்த வழிபாட்டுத் தலங்களை மேம்படுத்துவதற்கும் மின்சாரம் மற்றும் எரிசக்திக்கான செலவினங்களைக் குறைப்பதற்கும் இந்தியப் பிரதமர் பல திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஊடகவியலாளர்களின் கேள்விக்கு பதிலளித்த உயர்ஸ்தானிகர், இலங்கையில் எந்தவொரு ஜனாதிபதி அல்லது ஆட்சியில் இருக்கும் அரசாங்கத்திற்கு தனது ஒத்துழைப்பை வழங்க இந்திய அரசாங்கம் தயாராகவே உள்ளது என்று கூறியுள்ளார்.

Share

Recent Posts

தொடர்புடையது
articles2FDa64TGfTKDPmX85aOKjK
உலகம்செய்திகள்

நைஜீரியாவில் கடத்தப்பட்ட மாணவர்கள்: அவர்களை விடுவிக்கப் பாப்பரசர் லியோ உருக்கமான வேண்டுகோள்!

நைஜீரியாவில் ஆயுதக் குழுக்களால் கடத்தப்பட்ட மாணவர்களை உடனடியாக விடுவிக்குமாறு பாப்பரசர் லியோ (Pope Leo) உருக்கமான...

24 66ce10fe42b0d
செய்திகள்இலங்கை

தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய அம்பிட்டிய சுமணரத்ன தேரரை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

‘வடக்கில் உள்ள தமிழ் மக்களை தெற்கில் உள்ள மக்களே வெட்டிக் கொல்ல வேண்டும்’ என்று பொதுவெளியில்...

25 6925a9a6dc131
அரசியல்இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற பெண் ஊழியர் மீதான பாலியல் அத்துமீறல் புகார்: ஓய்வுபெற்ற நீதிபதியின் அறிக்கையில் முக்கிய முடிவு!

நாடாளுமன்ற பெண் ஊழியர் ஒருவர் மீது பாலியல் அத்துமீறல் ஏதேனும் செய்யப்பட்டுள்ளதா என்பதை விசாரித்து அறிக்கை...