14 16
இலங்கைசெய்திகள்

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

Share

60 வருடங்கள் நிறைவேறாத எதிர்பார்ப்புக்கு கிடைத்தது தீர்வு: அமைச்சருக்கு மக்கள் நன்றி தெரிவிப்பு

கிளிநொச்சி (Kilinochchi) – ஸ்கந்தபுரம், கண்ணாபுரம் வீதியின் புனரமைப்பு பணிகள் 60 வருடங்களின் பின்னர் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து குறித்த பகுதி மக்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு (Douglas Devananda) தமது நன்றிகளை தெரிவித்துள்ளனர்.

குன்றும் குழியுமாக இருந்த குறித்த வீதியால் அப்பகுதி மக்களின் போக்குவரத்தில் நாளாந்தம் பல்வேறு அசௌகரியங்களை ஏற்பட்ட நிலையில் அந்த வீதியை புனரமைத்துக் கொள்வதில் மக்கள் பெரும் சவாலையும் தட்டிக்களிப்மையும் எதிர்கொண்டு வந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த 20.07.2024 அன்று கண்ணாபுரம் சென்றிருந்த டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்களுடன் கலந்துரையாடி மக்களின் தேவைப்பாடுகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்து கேட்டறிந்து கொண்டார்.

இதன்போது, கண்ணாபுரம் பிரதேச மக்களால் தமது பிரதேசத்தின் வீதியை செப்பனிட்டு தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மக்களின் அவசிய தேவையாக இருந்த குறித்த கோரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுத்த அமைச்சர், 60 வருடங்களாக புனரமைக்கப்படாதிருந்த கண்ணாபுரம் வீதியை விரைவாக புனரமைப்பதற்கு துரித நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்திருந்தார்.

இதனை தொடரந்து, குறித்த வீதியின் புனரமைப்பு பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டு துரிதமாக முன்னெடுக்கப்படுகின்றன.

முன்னதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தொடர் முயற்சியின் பயனாக ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம், அக்கராயன், கோணாவில், ஆனைவிழுந்தான் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த காணிகளற்ற குடும்பங்களுக்கு அப்பகுதியில் உள்ள கரும்புத் தோட்டக் காணி பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தது.

அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் கரும்பு செய்கையை மேலும் விருத்தி செய்வதற்காக ஸ்கந்தபுரத்திலுள்ள கரும்புகுத்தோட்ட காணி உரிமையாளர்களின் நலன்கருதி கட்சி நிதியிலிருந்து 15 இலட்சம் ரூபாய் நிதியை ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, வழங்கியிருந்தார்.

ஸ்கந்தபுரம் – கரும்புத்தோட்ட விவசாய அமைப்பினரின் கோரிக்கைக்கு அமைய குறித்த நிதியுதவி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Untitled 24
செய்திகள்உலகம்

ஈரான் போர் நிறுத்தம் கோருகிறது: ஹோர்முஸ் ஜலசந்தி திறக்கப்படும் வரை தாக்குதல் தொடரும் என டிரம்ப் எச்சரிக்கை!

ஈரானின் புதிய தலைமை (New Regime) அமெரிக்காவிடம் போர் நிறுத்தம் கோரியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட்...

Untitled 23
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாளை நாடு தழுவிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தம்: 24 மணி நேரப் போராட்டத்திற்கு GMOA அழைப்பு!

நாட்டிலுள்ள அனைத்து அரச மருத்துவமனைகளையும் தழுவிய ரீதியில் நாளை (ஏப்ரல் 02, 2026) வியாழக்கிழமை காலை...

Untitled 22
செய்திகள்இந்தியா

மத்திய கிழக்கு போர் எதிரொலி: இந்தியாவில் ஏடிஎஃப் மற்றும் வர்த்தக எரிவாயு விலைகள் உயர்வு!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் போர் பதற்றம் காரணமாக உலகளாவிய எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ள...

Untitled 21
செய்திகள்உலகம்

வானில் இன்று தோன்றும் ‘இளஞ்சிவப்பு நிலவு’: 50 ஆண்டுகளுக்குப் பின் நிலவுக்கான மனிதப் பயணம் தொடக்கம்!

புதிய வசந்த காலத்தின் வருகையை அறிவிக்கும் வகையில், ஏப்ரல் மாதத்தின் முதல் முழு நிலவான ‘இளஞ்சிவப்பு...