6 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடுத்த முப்பது நாட்களில் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக 3000 மில்லியன் ரூபாய் முதல் 5,000 மில்லியன் ரூபாய் வரை செலவழிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களனி ரஜமஹா விஹாரையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்காக இவ்வளவு பணம் செலவு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டே தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் கலந்துகொள்ள செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

இலங்கையின் நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களையும் மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர்.

ஆனால் இதனையறியாத அரசியல்வாதிகள் இன்னும் கூட்டத்தை கூட்டுவதற்கு பணத்தை செலவிடுகிறார்கள் என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலில் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய நிதி தொடர்பான கூட்டத்தை தேர்தல் ஆணையகம் அண்மையில் கூட்டியபோது, சஜித் பிரேமதாச. ஒரு வாக்காளருக்கு 250 ரூபாய் வீதம் 4.2 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவும் 4.2பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளாக தெரிவித்ததாக ஜனக ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச, வாக்காளர் ஒருவருக்கு 300ரூபாய் வீதம் 5.1 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும், அனுரகுமார திஸாநாயக்க 200 ரூபாய் வீதம் 3.4 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாகவும் இணக்கம் வெளியிட்டனர்.

எனினும் தாம் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் வீதம் 340 மில்லியன் ரூபாயை செலவிட இணங்கியதாக ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரசாரங்களுக்கு 3000 மில்லியன் ரூபா முதல் 5000 மில்லியன் ரூபா வரை செலவு செய்வது நாட்டின் கடனில் பாதியை தீர்த்து வைக்க உதவும் என்று குறிப்பிட்ட ரட்நாயக்க, வரி செலுத்தாத வேட்பாளர்களின் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வது நல்லது என சுட்டிக்காட்டியுள்ளார்

40 வீதமான மக்கள் உணவு வாங்க முடியாத ஒரு நாட்டில், அரசியலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது அபத்தமானது என்றும் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
world 231
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணையை இனி மூடப்போவதில்லை: ஈரானின் உறுதிமொழியை அறிவித்தார் டொனால்ட் டிரம்ப்!

சர்வதேச எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும் ஹோர்முஸ் நீரிணையை (Strait of Hormuz) இனிவரும் காலங்களில்...

world 230
செய்திகள்இலங்கைபிராந்தியம்

நாய்கள் அச்சப்படுவதாகக் கூறி பட்டாசு கொளுத்த வேண்டாமெனக் கேட்ட பெண் மீது தாக்குதல்: ஒருவர் கைது!

மொரகஹஹேன பகுதியில் பட்டாசு கொளுத்துவதை நிறுத்துமாறு கோரிய பெண் ஒருவர் மீது, அவரது அண்டை வீட்டார்...

world 229
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பெட்ரோல் வாகனங்களுக்கு மீண்டும் QR முறை: தற்காலிக சலுகை இன்று நள்ளிரவுடன் நிறைவு!

சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு பண்டிகைக் காலத்தை முன்னிட்டு பெட்ரோல் வாகனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த தற்காலிக கியூ.ஆர்...

world 228
செய்திகள்உலகம்

ரஷ்ய எண்ணெய் மீதான தடை விலக்கை மேலும் ஒரு மாதம் நீடித்தது அமெரிக்கா!

சர்வதேச எரிசக்தி சந்தையில் நிலவும் கடும் விலை ஏற்றம் மற்றும் விநியோகத் தட்டுப்பாடுகளைக் கருத்திற்கொண்டு, ரஷ்யாவின்...