6 30
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

Share

ஜனாதிபதி வேட்பாளர்கள் செலவிடப்போகும் 5000 மில்லியன் ரூபாய்கள்

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக அடுத்த முப்பது நாட்களில் அவர்களின் தேர்தல் பிரச்சாரங்களுக்காக 3000 மில்லியன் ரூபாய் முதல் 5,000 மில்லியன் ரூபாய் வரை செலவழிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

களனி ரஜமஹா விஹாரையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், குறிப்பாக நாடு நெருக்கடியில் இருக்கும் போது தேர்தலுக்காக இவ்வளவு பணம் செலவு செய்வது நாட்டுக்கு நல்லதல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.

மில்லியன் கணக்கான பணத்தை செலவிட்டே தேர்தல் கூட்டங்கள் மற்றும் பேரணிகளில் மக்கள் கலந்துகொள்ள செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டார்

இலங்கையின் நாடாளுமன்றில் உள்ள 225 உறுப்பினர்களையும் மக்கள் ஏற்கனவே நிராகரித்துள்ளனர்.

ஆனால் இதனையறியாத அரசியல்வாதிகள் இன்னும் கூட்டத்தை கூட்டுவதற்கு பணத்தை செலவிடுகிறார்கள் என்று ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக தேர்தலில் வேட்பாளர் ஒருவர், வாக்காளர் ஒருவருக்கு செலவிடக்கூடிய நிதி தொடர்பான கூட்டத்தை தேர்தல் ஆணையகம் அண்மையில் கூட்டியபோது, சஜித் பிரேமதாச. ஒரு வாக்காளருக்கு 250 ரூபாய் வீதம் 4.2 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாக தெரிவித்தார்.

ரணில் விக்ரமசிங்கவும் 4.2பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளாக தெரிவித்ததாக ஜனக ரட்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

நாமல் ராஜபக்ச, வாக்காளர் ஒருவருக்கு 300ரூபாய் வீதம் 5.1 பில்லியன் ரூபாயை செலவிடவுள்ளதாகவும், அனுரகுமார திஸாநாயக்க 200 ரூபாய் வீதம் 3.4 பில்லியன் ரூபாய்களை செலவிடவுள்ளதாகவும் இணக்கம் வெளியிட்டனர்.

எனினும் தாம் ஒரு வாக்காளருக்கு 20 ரூபாய் வீதம் 340 மில்லியன் ரூபாயை செலவிட இணங்கியதாக ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் பிரசாரங்களுக்கு 3000 மில்லியன் ரூபா முதல் 5000 மில்லியன் ரூபா வரை செலவு செய்வது நாட்டின் கடனில் பாதியை தீர்த்து வைக்க உதவும் என்று குறிப்பிட்ட ரட்நாயக்க, வரி செலுத்தாத வேட்பாளர்களின் கணக்கில் இவ்வளவு பணம் எப்படி உள்ளது என்பதை ஆராய்வது நல்லது என சுட்டிக்காட்டியுள்ளார்

40 வீதமான மக்கள் உணவு வாங்க முடியாத ஒரு நாட்டில், அரசியலுக்கு இவ்வளவு பெரிய தொகையை செலவிடுவது அபத்தமானது என்றும் ஜனக ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
12 4
செய்திகள்உலகம்

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்: அமெரிக்காவில் போர் நிறுத்த முயற்சி முறியடிப்பு

மத்திய கிழக்கில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் முன்னெடுத்து வரும் ‘ஆபரேஷன் எபிக் பியூரி’ (Operation Epic...

11 4
செய்திகள்உலகம்

ஹோர்முஸ் நீரிணை முடக்கம்: வளைகுடா கடற்பரப்பில் சிக்கித் தவிக்கும் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள்

மத்திய கிழக்கில் நிலவும் தீவிர போர்ச் சூழல் காரணமாக ஈரானின் ஹோர்முஸ் நீரிணை (Strait of...

10 4
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கை அருகே இரண்டாவது ஈரானிய கப்பல்: 87 சடலங்கள் மீட்பு – பாராளுமன்றத்தில் அமைச்சர் விளக்கம்!

இலங்கை கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்தில் (EEZ) இரண்டாவது ஈரானிய கப்பல் (IRINS Bushehr...

09 4
செய்திகள்உலகம்

ஈரான் அணு ஆயுதத் திறனை இழக்கும் வரை போர்நிறுத்தம் கடினம்: அவுஸ்திரேலிய, கனடிய பிரதமர்கள் எச்சரிக்கை!

மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், அவுஸ்திரேலியப் பிரதமர் அந்தோனி அல்பானிஸ் மற்றும் கனடியப்...