jeeva
செய்திகள்இலங்கை

தேர்தல் ஆணைக்குழுவிலிருந்து ஜீவன் தியாகராஜா விலகல்

Share

தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர்களில் ஒருவராக செயற்பட்டு வரும் ஜீவன் தியாகராஜா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் தனது இராஜினாமாக் கடிதத்தினை கையளித்துள்ளார்.

இதனையடுத்து எதிர்வரும் வாரத்திற்குள் வடமாகாண ஆளுநராக கடமைகளை ஜீவன் தியாகராஜா பொறுப்பேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவின் பணிப்புரைக்கு அமைவாக, ஜனாதிபதியின் செயலாளர் பீ.பி.ஜயசுதந்தர தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினராக செயற்பட்டுக்கொண்டிருந்த ஜீவன் தியாகராஜாவை அப் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு கோரிய கடிமொன்றினை அனுப்பி வைத்திருந்தார்.

அந்தக் கடிதத்தில் வடக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் நியமனம் தொடர்பான விடயமும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற தேர்தல்கள் ஆணைக்குழுவின் கூட்டத்தில் இறுதியாகப் பங்கேற்ற ஜீவன் தியாகராஜா, தற்போது தனது இராஜினாமாக் கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனடிப்படையில் அவர் விரைவில் வடக்கு மாகாண ஆளுநருக்கான பொறுப்பை ஏற்பார் என அரசியல் வட்டராங்களில் பேச்சுக்கள் எழுந்துள்ளன.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
army are
இலங்கை

போதைப்பொருளுடன் கைதான முன்னாள் ராணுவ சிப்பாய்.

கம்பஹா மாவட்டம், கந்தானை பிரதேசத்தில் 120 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் மகரை பிரதேசத்தை சேர்ந்த 56...

body 2
இலங்கை

மூன்று பிள்ளைகளின் தந்தை மூன்று நாட்களின் பின் சடலமாக மீட்பு.

மொனராகலை மாவட்டம், படல்கும்புரை பிரதேசத்தில் வீட்டிலிருந்து வெளியே சென்ற நிலையில் காணாமல்போயிருந்த குடும்பஸ்தர் ஒருவர், மூன்று...

acdent 19
இலங்கை

இளைஞர்களின் உயிரைக்குடித்த வேகம்.

  இன்று அதிகாலை சுமார் 2.30 மணியளவில் ஹொரணை – மொரகஹஹேன வீதியில் இடம்பெற்ற விபத்தில்...

fire 19
இலங்கை

அதிகரித்துள்ள வெப்பத்திற்கு மத்தியில் இரத்மலானை குடியிருப்பு வளாகமொன்றில் தீ பரவல்.

இரத்மலானை பொருளாதார மத்திய நிலையத்துக்கு அருகிலுள்ள குடியிருப்பு வளாகமொன்றில் இன்று தீப்பரவல் ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்ததைத்...