new 1
இலங்கைசெய்திகள்

ஒரே நாடு, ஒரே சட்டம் – ஜனாதிபதி வாக்குறுதி

Share

இலங்கை இராணுவத்தின் 72ஆவது வருடப் பூர்த்தியை முன்னிட்டு இன்று அநுராதபுரம் சாலியபுர கஜபா ரெஜிமென்ட் தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச கலந்துகொண்டுள்ளார்.

அத்துடன் கிரிக்கெட் மைதானம் ஒன்றையும் திறந்து வைத்ததுடன் மைதானத்தில் கிரிக்கெட் விளையாட்டில் ஈடுபட்டுள்ளார். இதில் கிரிக்கெட் வீரர் பெரேராவின் பந்தை ஜனாதிபதி எதிர்கொண்டார். நிகழ்வில் கிரிக்கெட் வீரர் அஜந்த மெண்டிஸூம் கலந்து கொண்டார்.

இந்த நிலையில் ஜனாதிபதி இராணுவ தினத்தை முன்னிட்டு உரையாற்றுகையில்,

நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியமைந்தமையை வேறு காரணங்களை முன்னிலைப்படுத்தி நியாயப்படுத்தப் போவதில்லை.

கொரோனாத் தொற்றைக் கட்டுப்படுத்த 2 வருடங்களாக போராடி வருகின்றோம்.

நாட்டை முடக்கியமை, பல்வேறு தடைகள் காரணமாக நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதற்காக நியாயம் கூற முடியாது.

மக்களுக்காக நாம் பாரிய வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றோம் தொற்றைக் கட்டுப்படுத்தி புதிய இயல்பு நிலைமையில் நாட்டை திறந்து புது உத்வேகத்துடன் நாட்டை முன்னேற்றவுள்ளோம்.

அத்துடன் புதிய அரசமைப்பை அடுத்த வருடத்துக்குள் கொண்டு வரவும் புதிய தேர்தல் முறைமையொன்றை அடுத்த வருடத்துக்குக் கொண்டு வரவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே நாடு, ஒரே சட்டம் என்ற வாக்குறுதியை இந்த வருட இறுதிக்குள் நிறைவேற்றுவோம் என ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

newrr

new 3

ne3

nr

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
articles2FhQ32bJ38eZ8F2FPwbN0k
செய்திகள்உலகம்

கிரிமியா பாலம் தாக்குதல்: 8 பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளித்து ஆயுள் தண்டனை விதிப்பு!

ரஷ்யா-உக்ரைன் போரின்போது கிரிமியா பாலத்தின் (Crimean Bridge) மீது தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பான வழக்கில் கைது...

25 69274cb0355bf
செய்திகள்இலங்கை

மலையக ரயில் மார்க்க சேவை மாற்றம்: நாளை காலை வரை கோட்டை-ரம்புக்கனைக்கு இடையே மட்டுமே இயக்கம்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, மலையக ரயில் மார்க்கத்தில் (Up-Country Line) உள்ள அனைத்து...

a0ec4e898a025565eef9a0e946ab5c0fY29udGVudHNlYXJjaGFwaSwxNzM0OTk0MzEw 2.78463606
செய்திகள்இலங்கை

அதிவேக நெடுஞ்சாலைகளில் கட்டணம் ரத்து: சீரற்ற காலநிலை சீரடையும் வரை வாகனங்கள் இலவசமாகப் பயணிக்க அனுமதி!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கான கட்டணங்கள் அறவிடப்படாது என...

1500x900 1472110 start
செய்திகள்இலங்கை

மோசமான வானிலை காரணமாக மலேசியாவின் ஏர் ஏசியா விமானம் திருவனந்தபுரத்திற்குத் திருப்பி அனுப்பப்பட்டது!

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான வானிலை காரணமாக, மலேசியாவிலிருந்து இன்று (நவம்பர் 28) இரவு...