31
இலங்கைசெய்திகள்

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

Share

திரான் அலஸ் மீது பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்த அமெரிக்கா!

நாட்டின் எல்லையை இந்தியாவிற்கு விற்ற பொதுப் பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸின் மீது அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பகிரங்க குற்றச்சாட்டுக்களை முன்வைத்து வருவதாக குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

பிலியந்தலை நகரசபை கேட்போர் கூடத்தில் நேற்று நடைபெற்ற கட்சி பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் போதே சம்பிக்க ரணவக்க இதனை கூறியுள்ளார்.

தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

”இந்நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சர் என்று அழைக்கப்படுபவர் பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகியுள்ளார்.

மேலும், நாட்டின் எல்லை இந்தியாவிற்கு தாரைவார்க்கப்பட்டுள்ளது. இன்று தேசபக்தர்கள் எங்கே? தேசிய வளத்தை காப்பாற்ற வேண்டும் என்று பேசியவர்கள் இன்று எங்கே?

இலங்கை வரலாற்றில் 2.7 மில்லியன் டொலர் மோசடி இடம்பெற்றுள்ளது. ஊழலைப் பற்றிப் பேசுபவர்களுக்கு ஊழலுக்கு துணைபோகும் பொதுப் பாதுகாப்புத் துறை அமைச்சரின் பெயர் நினைவில் இல்லை.

இங்கு திசைகாட்டி கூட்டணிக்கு ஒரு சவால் விடுக்கின்றேன். முடிந்தால் அவரது ஊழல்களை பகிரங்கப்படுத்துங்கள்.

வெளிநாடுகளில் உள்ள அவரது சொத்துக்கள் குறித்து கடந்த ஆண்டு சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

இதுவரையில் திரான் தொடர்பில் இலஞ்சஊழல் ஆணைக்குழு எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.” என்றார்.

Share
தொடர்புடையது
08 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

மத்திய கிழக்கு போர் சூழல்: ஜெய்சங்கர் – விஜித ஹேரத் இடையே முக்கிய பேச்சுவார்த்தை!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கிடையில்...

07 21
செய்திகள்இலங்கைபிராந்தியம்

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் குணவர்தனவின் பிணை மனு நிராகரிப்பு: மார்ச் 31 வரை விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தனவினால் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனுவை கொழும்பு நீதவான்...

06 20
உலகம்செய்திகள்

ஈரானுடனான பகையை முடிக்கத் திட்டம்: 5 நாட்களுக்குத் தாக்குதல்களை ஒத்திவைத்தார் ட்ரம்ப்!

மத்திய கிழக்கில் நிலவி வரும் தீவிரமான மோதல்களுக்கு “முழுமையான மற்றும் நிலையான தீர்வை” எட்டும் நோக்கில்,...

05 22
உலகம்செய்திகள்

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் எச்சரிக்கை தேவை: ஈரான் நாடாளுமன்ற உறுப்பினர் இஸ்மாயில் கோவ்சாரி!

அமெரிக்காவுடன் எந்தவொரு இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளிலும் ஈடுபடுவதற்கு முன்பாக, ஈரானிய உயர் அதிகாரிகள் மிகவும் “விவேகமாகச் சிந்திக்க...