27 5
இலங்கைசெய்திகள்

தேர்தல் காலங்களில் பொது வளங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Share

தேர்தல் காலங்களில் பொது வளங்கள் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது பொது வளங்களை தவறாக பயன்படுத்துவதற்கு எதிராக ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேசனல் ஸ்ரீலங்கா கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இந்தநிலையில், அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான பொது வளங்களின் பொறுப்பாளர்கள் மற்றும் அறங்காவலர்களாக அரச அதிகாரிகளின் முக்கிய பங்கை, நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் நடீசானி பெரேரா (Nadeeshani Perera) வலியுறுத்தியுள்ளார்.

அனைத்து குடிமக்களுக்கும் சொந்தமான வளங்கள் மீதான அதிகாரம் அரச அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் உள்ள வளங்கள், பொது நிதியில் இருந்து இயற்கை வளங்கள் வரை அனைத்து அரச சொத்துக்கள் வரை இலங்கை மக்களுக்கும் குழந்தைகளுக்கும் சொந்தமானது என்று பெரேரா கூறியுள்ளார்.

மக்கள் பிரதிநிதிகள் இந்த வளங்களைப் பாதுகாக்கும் பணியை பொது அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.

எனவே அவர்கள் பொதுமக்களின் நம்பிக்கையை நிலைநிறுத்துவதற்கான புனிதமான கடமையைக் கொண்டுள்ளனர் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது ஆட்சியில் இருப்பவர்கள் கூட தங்கள் அரசியல் பிரசாரங்களுக்கு அரச வளங்களை பயன்படுத்த முடியாது என்று அவர் வலியுறுத்தியுள்ளார்

அது ஒரு குற்றம், நம்பிக்கை மீறல் என அரசியல் சாசனத்தால் கூறப்பட்டுள்ளதை நினைவூட்டியுள்ள அவர், இந்த குற்றங்களுக்காக சிறைத்தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்படும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...