21 5
இலங்கைசெய்திகள்

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

Share

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

துருக்கி அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை சர்வதேச அளவில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அனைத்து தெருநாய்களையும் கொல்ல சட்டம் பிறப்பிக்கப்படவில்லை எனவும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்யவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் 4 மில்லியன் தெருநாய்கள் வசிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், துருக்கி மக்களுக்கு பாதிப்பும், போக்குவரத்து இடையூறும், நோய் பரவுதலும் ஏற்பட்டுள்ளன.

எனினும், துருக்கி அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
இலங்கை

மின்னல் தாக்கத்தினால் பலியாவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு.

ஆண்டுதோறும் 50க்கும் மேற்பட்டோர், நாட்டில் மின்னல் தாக்கங்களால் உயிரிழப்பதாக இன்று கொழும்பில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி...

bus deesel
இலங்கை

டீசல் இல்லாமல் இயக்கப்படும் பேருந்துகள் !

மண்ணெண்ணெயைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக இயக்கப்படும் பேருந்துகள் மீது காவல்துறை நாடு தழுவிய அளவில் தீவிர நடவடிக்கைகளைத்...

canada job
இலங்கை

கனடா மோகம் – பறிபோன எட்டு மில்லியன் ரூபா.

யாழ்ப்பாணம், மல்லாகம் பகுதியை சேர்ந்த ஐவரிடம் கனடா – லக்சம்பர்க் நாடுகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளை பெற்றுத்...

police team
இலங்கை

துரிதமாக இடம்பெறும் இரண்டு தனி காவல்துறையினரின் விசாரணை.

மேல் மாகாண தெற்கு குற்றப் பிரிவும், மாலபே பொலிஸாரும் இணைந்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர்...