21 5
இலங்கைசெய்திகள்

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

Share

துருக்கியில் தெருநாய்களுக்கு எதிரான சட்டம்: பிரித்தானிய சுற்றுலா பயணிகளின் எதிர்ப்பு

துருக்கியில் உள்ள தெருநாய்களைக் கொல்வதற்கு துருக்கி அரசாங்கம் அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கியதையடுத்து, பிரித்தானிய சுற்றுலா பயணிகள் அந்நாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர்.

துருக்கி அரசாங்கத்தின் குறித்த நடவடிக்கை சர்வதேச அளவில் பாரிய எதிர்ப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அனைத்து தெருநாய்களையும் கொல்ல சட்டம் பிறப்பிக்கப்படவில்லை எனவும் குணப்படுத்த முடியாத நோய்களால் பாதிக்கப்பட்ட நாய்களை கருணைக்கொலை செய்யவே தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் துருக்கி அரசாங்கம் தெரிவித்துள்ளது.

துருக்கியில் 4 மில்லியன் தெருநாய்கள் வசிப்பதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதனால், துருக்கி மக்களுக்கு பாதிப்பும், போக்குவரத்து இடையூறும், நோய் பரவுதலும் ஏற்பட்டுள்ளன.

எனினும், துருக்கி அரசாங்கத்தின் இந்த தீர்மானத்துக்கு சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்படுகின்றன.

Share
தொடர்புடையது
25 680b5efd70985
செய்திகள்அரசியல்இலங்கை

உகண்டா பணத்தை மீட்க ஒத்துழைக்கத் தயார் – அரசாங்கத்திற்கு நாமல் ராஜபக்ச சவால்!

ராஜபக்சக்களால் உகண்டாவில் பதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிதியை அநுர அரசாங்கம் ஏன் இன்னும் மீட்கவில்லை என ஸ்ரீலங்கா...

vikatan 2025 12 25 jj677mzq ajitha 66
செய்திகள்இந்தியா

தவெக மாவட்டச் செயலாளர் பதவி கிடைக்காததால் விரக்தி: தூக்க மாத்திரை உட்கொண்டு பெண் நிர்வாகி தற்கொலை முயற்சி!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) தூத்துக்குடி மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்படாததால்...

Kajenthirakumar Ponnambalam
செய்திகள்அரசியல்இலங்கை

பலாலி ஓடுதளத்தை விரிவாக்குவது அவசியம் – இந்திய அமைச்சர் ஜெய்சங்கரிடம் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வலியுறுத்தல்!

யாழ்ப்பாணம் – பலாலி விமான நிலையத்தின் ஓடுதளத்தை விரிவுபடுத்தி, அதனை முழுமையான சர்வதேச தரத்திற்கு உயர்த்துவது...

25 694d11c3cbd81
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

கண்டி – ஹசலகவில் கோரத் தாண்டவமாடிய நிலச்சரிவு: 5 கிராமங்கள் வசிக்கத் தகுதியற்றவை என அறிவிப்பு!

டித்வா புயலால் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவுகளைத் தொடர்ந்து கண்டி மாவட்டத்தில் ஹசலக நகரை ஒட்டிய பமுனுபுர...