4 10
இலங்கைசெய்திகள்

சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை

Share

சஜித் தலைமையிலான அரசாங்கத்தில் யாருக்கு பிரதமர் பதவி: கட்சிக்குள் பேச்சுவார்த்தை

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம் அமைத்தால் பிரதமர் பதவி யாருக்கு வழங்கப்படும் என்பது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் சஜித் தரப்பு வெற்றியீட்டினால், பிரதமர் பதவி ரஞ்சித் மத்துமபண்டாரவிற்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்துமபண்டார கட்சியின் பொதுச்செயலாளராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் பதவி குறித்து தற்பொழுது கட்சியில் பேச்சுவார்த்தை நடத்தப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

ரஞ்சித் மத்தும பண்டாரவின் தேர்தல் தொகுதியான மொனராகல் மாவட்டத்தைச் சேர்ந்த கட்சி ஆதரவாளர்களும் இந்த விடயம் பற்றி தெரிவித்துள்ளனர்.

ஏனைய கட்சிகள் தங்களது அரசாங்கத்தின் பிரதமர் யார் என்பது பற்றிய பேச்சுக்களை இதுவரையில் முன்னெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
MediaFile 1 1
செய்திகள்இலங்கை

தொழிற்கல்வி தகவல் சேவை: ‘1966’ துரித இலக்கம் ஆரம்பம்! மும்மொழிகளிலும் AI உதவியுடன் தகவல் பெறலாம் – பிரதமர் அறிவிப்பு

இடைநிலைக் கல்விக்குப் பிறகு தொழிற்கல்விக்கு மாறுவது குறித்து மாணவர்களுக்குத் துல்லியமான மற்றும் திறன்மிக்க தகவல்களை வழங்குவதற்காக...

24 66f5b4f430c76
இலங்கைஅரசியல்செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு அபே ஜனபல கட்சி ஆதரவு: சிந்தக வீரகோன் அறிவிப்பு!

அபே ஜனபல கட்சி, தேசிய மக்கள் சக்தி தலைமையிலான தற்போதைய அரசாங்கத்திற்குத் தமது முழுமையான ஆதரவை...

image 31498f2500
செய்திகள்இலங்கை

மட்டக்களப்பு – கல்முனை வீதியில் முச்சக்கரவண்டி விபத்து: குருக்கள்மடத்தில் 3 இளைஞர்கள் படுகாயம்!

களுவாஞ்சிகுடி காவல்துறைப் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் நேற்றிரவு (நவம்பர் 7) முச்சக்கரவண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை...

20061616 baby
இலங்கைசெய்திகள்

21 வருட காத்திருப்புக்குப் பின் 3 குழந்தைகளைப் பிரசவித்த தாய் யாழில் உயிரிழப்பு! – குடும்பத்தினர் சோகம்

யாழ்ப்பாணம், கரவெட்டிப் பகுதியைச் சேர்ந்த யோகராசா மயூரதி (வயது 45) என்ற குடும்பப் பெண், 21...