17 4
இலங்கைஉலகம்செய்திகள்

கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா

Share

கோட்டாபயவை போன்றே நாட்டில் இருந்து வெளியேறிய சேக் ஹசீனா

அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை அடுத்து பங்களாதேஷின் பிரதமர் சேக் ஹசீனா (Sheikh Hasina) திங்களன்று பதவி விலகியமையும், இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நாட்டில் இருந்து வெளியேறியமையும் ஒரே தன்மை கொண்ட சம்பவங்கள் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இடஒதுக்கீட்டுப் போராட்டங்கள், இறுதியில் பிரதமருக்கு எதிரான போராட்டங்களாக மாறிய நிலையிலேயே ஹசீனாவின் பதவி விலகலும் நாட்டில் இருந்து வெளியேறிய சம்பவமும் இடம்பெற்றுள்ளது.

எனினும் கோட்டாபய ராஜபக்ச, வெளிநாடு ஒன்றில் பாதுகாப்பாக சென்ற பின்னரே தமது பதவி விலகலை அறிவித்திருந்தார்.

இந்தநிலையில் பங்களாதேஷில் ஏற்பட்டுள்ள நிலைமை, இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த எச்சரிக்கையின் நிமித்தம், பங்களாதேஷ் உடனான தொடருந்து சேவைகளை இந்தியா நிறுத்தியுள்ளது.

முன்னதாக ஜூலை நடுப்பகுதியில் இருந்து அரச வேலைகளுக்கான ஒதுக்கீட்டை இரத்து செய்யக் கோரி போராட்டம் நடத்திய பொலிஸாருக்கும் எதிர்ப்பாளர்களுக்கும் இடையே வன்முறை மோதல்களின் போது பங்களாதேஷில் குறைந்தபட்சம் 91 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
ranil d
இலங்கை

கொழும்பு கோட்டை நீதிமன்றில் ரணில் ?

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச்சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு...

Death penalty 22
இலங்கை

எட்டுப் பேருக்கு மரண தண்டனை – கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பு.

எட்டு பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கடந்த 1997ஆம் ஆண்டு இடம்பெற்ற...

dollar
வணிகம்இலங்கை

அதிகரித்தது அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதி!

இன்றைய தினம் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்கள் பிரகாரம், அமெரிக்க டொலரின்...

iran us
உலகம்

அமெரிக்காவின் 80 இற்கும் அதிகமான இலக்குகள் மீது ஈரான் தாக்குதல் – எண்ணெய் ஏற்றுமதி உரிமத்தினை ரத்து செய்த அமெரிக்கா!

அமெரிக்கா ஈரானின் இலக்குகள் மீது நேற்று பலமான வான்வழித் தாக்குதல்களை முன்னெடுத்தது. ஹோர்முஸ் நீரிணையில் வர்த்தகக்...