15 3
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்

Share

ஜனாதிபதி தேர்தலில் மேலுமொரு வேட்பாளர் களம் இறங்குகிறார்

மௌபிம ஜனதா கட்சியின் தலைவரும், தொழிலதிபருமான திலித் ஜயவீர, ‘சர்வஜன பலய’ கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு (Colombo) சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் நேற்று (04.08.2024) இரவு இடம்பெற்ற மாநாட்டின் போதே சர்வஜன பலயவின் நிறைவேற்று உறுப்பினர் விமல் வீரவன்ச இதனை அறிவித்தார்.

நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச, நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, தொழிலதிபர் திலித் ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர் கெவிந்து குமாரதுங்க உட்பட ‘சர்வஜன பலய’ கூட்டணியின் முக்கிய உறுப்பினர்கள் பலர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

ஏற்கனவே ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச, அனுரகுமார திசாநாயக்க, விஜயதாச ராஜபக்ச, நுவன் போப்பகே, கீர்த்திரத்ன உட்பட்ட பலர், ஜனாதிபதி தேர்தலுக்கான தமது போட்டியை அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
மேர்வின் சில்வா
இலங்கை

மேர்வின் சில்வாவிற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல்.

கிரிபத்கொடவிலுள்ள அரசிற்குச் சொந்தமான காணியொன்றை, போலி ஆவணங்களைப் பயன்படுத்தி விற்க முயன்றதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டின் கீழ்,...

Death penalty 22 1
இலங்கை

பதினைந்து வருட கால வழக்கு – மரண தண்டனை தீர்ப்பு.

கடந்த 2011-ஆம் ஆண்டு எல்பிட்டிய காவல்துறை பிரிவிற்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில், பாலபிட்டிய உயர்...

Chemmani Mass Graves
இலங்கை

இன்றைய தினத்திலும் செம்மணியில் சிறார்களின் எலும்புக்கூடுகள்.

செம்மணி சித்துப்பாத்தி மனித புதைகுழியின் மூன்றாம் கட்டத்தின் மூன்றாம் பகுதி அகழ்வு பணிகள் இன்றைய தினம்...

Resignation
இலங்கை

நீர்கொழும்பு மாநகர சபை மேயர் பதவி விலகல்.

தேசிய மக்கள் சக்தி ஆட்சியிலுள்ள நீர்கொழும்பு மாநகர சபையின் மேயர் ரொபர்ட் ஹீன்கெந்த தமது பதவியிலிருந்து...