newvirus
செய்திகள்இந்தியா

தொற்றாளர் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு

Share

இந்தியாவில் கொரோனாத் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில், 19 ஆயிரத்து 740 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இந்திய மத்திய சுகாதாரத்துறை அமைச்சரகம் இன்று காலை வெளியிட்டுள்ள தகவலில், கடந்த 24 மணி நேரத்தில் 19 ஆயிரத்து 740 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.

இதுவரை இந்தியாவில் கொரோனாத் தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 35 ஆயிரத்து 309 என பதிவாகியுள்ளது.

அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 23 ஆயிரத்து 70 பேர் குணமடைந்துள்ளதாகவும், இதுவரை கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 3 கோடியே 32 லட்சத்து 48 ஆயிரத்து 291 ஆக அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் தொற்றுக்குள்ளான 2 லட்சத்து 36 ஆயிரத்து 643 பேர் சிகிச்சை பெற்று வருவதுடன், கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 248 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை அங்கு உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்து 50 ஆயிரத்து 375 ஆக உயர்வடைந்துள்ளது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
03 19
செய்திகள்இலங்கைபிராந்தியம்

இலங்கையில் தங்கத்தின் விலை சடுதியாக வீழ்ச்சி: இன்று ஒரே நாளில் ரூ. 13,000 குறைவு!

உலக சந்தையில் தங்கத்தின் விலை வீழ்ச்சியடைந்ததை அடுத்து, இலங்கையிலும் தங்கத்தின் விலை கணிசமாகக் குறைந்துள்ளதாக சந்தைத்...

25 10
இந்தியாசெய்திகள்

டெல்லி தீ விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட ஒன்பது பேர் பலி; பிரதமர் மோடி இரங்கல்!

இந்தியத் தலைநகர் டெல்லியின் பாலம் (Palam) பகுதியில் உள்ள நான்கு மாடிக் கட்டடம் ஒன்றில் இன்று...

20 17
செய்திகள்அரசியல்இலங்கை

நாமலுக்கு எதிரான மின்சாரக் கட்டண நிலுவை வழக்கு: ஜூலை 1-ம் திகதி உயர் நீதிமன்றத்தில் விசாரணை!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமண நிகழ்விற்காகப் பயன்படுத்தப்பட்ட மின்சாரத்திற்கான 20 இலட்சம் ரூபாவிற்கும் (2...

19 15
செய்திகள்உலகம்

அலி லாரிஜானி படுகொலைக்கு ஈரான் பதிலடி: டெல் அவிவ் மீது கிளஸ்டர் ரக குண்டுகளால் தாக்குதல்!

ஈரானின் மூத்த பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி, இஸ்ரேலியத் தாக்குதலில் கொல்லப்பட்டதற்குப் பதிலடியாக, இஸ்ரேலின் டெல்...