பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கல்வி பயிலும் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தடுப்பூசியை மாத்திரம் செலுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டின் மாணவர்களின் நோயெதிர்ப்பு சக்திக்கு ஒரு தடுப்பூசி மாத்திரம் போதுமானது எனத் தெரிவித்துள்ளார்.
அதேவேளை 18,19 வயதுள்ள மாணவர்களுக்கு எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் தடுப்பூசி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
நேற்று நடைபெற்ற கொவிட் ஒழிப்பிற்கான விசேட செயலணி கூட்டத்தில் இம்முடிவு எடுத்ததாக தெரிவித்தார்.
அத்தோடு இலங்கையில் எதிர்வரும் மாதம் பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Leave a comment