17 1
இலங்கைசெய்திகள்

சஜித்தை சந்தித்த நாமல் : கேள்வி எழுப்பியுள்ள ரணிலின் ஆலோசகர்

Share

சஜித்தை சந்தித்த நாமல் : கேள்வி எழுப்பியுள்ள ரணிலின் ஆலோசகர்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, சிறி லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை சில நாட்களுக்கு முன்னர் சந்தித்ததாக கூறப்பட்டமை தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

எதற்காக இந்த சந்திப்பு இடம்பெற்றது என நாடாளுமன்ற விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் ஆலோசகர் ஆசு மாரசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.

குறித்த சந்திப்பு தொடர்பான செய்திகள் ஏற்கனவே சமூக ஊடகங்களில் பிரசுரிக்கப்பட்டிருந்தன.

இந்தநிலையில் இதன் பின்னணியில் உள்ள உண்மையை பிரேமதாச வெளிப்படுத்த வேண்டும் என ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றின்போது மாரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார்.

இதற்கிடையில், எதிர்வரும் நாட்களில் பரபரப்பான செய்திகள் வரும் என்றும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தற்போது சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி வருகின்றார் என்றும் மாரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

கடந்த புதன்கிழமை எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் தலதா அத்துகோரள வோட்டர்ஸ் எட்ஜில் இருந்து வெளியே வந்ததை சில ஊடகவியலாளர்கள் பார்த்தமைப் போன்ற நாடகங்களை விரைவில் பார்க்கமுடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
mahavali
இலங்கை

மகாவலியில் மாயமான 15 வயதுச் சிறுவன் – தேடுதல் பணிகள் தீவிரம்.

கம்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெலிகல்ல – உடோவிட்ட பகுதியில் மகாவலி ஆற்றில் மூன்று சிறுவர்கள் இணைந்து...

gun p
இலங்கை

டெங்கு ஒழிப்பில் சிக்கியது துப்பாக்கி.

பெலவத்தை பகுதியில் தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்திற்கு அமைவாக, மேற்கொள்ளப்பட்ட விசேட வளாகப் பரிசோதனை ஓன்றின்...

harsa
இலங்கை

நூலிழையில் உயிர் பிழைத்தார் ஹர்ஷ டி சில்வா!

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா, தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கடந்த 20ஆம் திகதி மாலை...

car bike
இலங்கை

நுவரெலியாவில் கோர விபத்து.

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், மல்லிப்பூ சந்திக்கு அண்மையில் நேற்று மாலை நுவரெலியா நோக்கி...