11 1
உலகம்செய்திகள்

அமெரிக்க ஊடகவியலாளரை விடுவித்த ரஷ்யா: நெகிழ்ச்சியில் அமெரிக்கா

Share

அமெரிக்க ஊடகவியலாளரை விடுவித்த ரஷ்யா: நெகிழ்ச்சியில் அமெரிக்கா

ரஷ்யாவிற்கும் (Russia) மேற்கு நாடுகளுக்கும் இடையில் இடம்பெற்ற மிகப்பெரிய கைதிகள் பரிமாற்றத்தில் அமெரிக்காவின் (US) ஊடகவியலாளர் இவான் கெர்ஷ்கோவிச் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இவர், கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் பெர்லினில் நாடு கடத்தப்பட்டவரைக் கொலை செய்ததன் குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நிலையிலேயே தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மேலும், குறித்த கைதி பரிமாற்றத்தில் மொத்தம் 24 நபர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா உறுதிப்படுத்தியுள்ளது.

பனிப்போர் காலத்திற்கு பிறகு ரஷ்யா மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு பதிலாக, அமெரிக்கா, நோர்வே, ஜெர்மனி, போலந்து மற்றும் ஸ்லோவேனியா ஆகிய நாடுகளில் உள்ள சிறைகளில் இருந்து உளவுத்துறை நடவடிக்கைகளில் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் உட்பட எட்டு ரஷ்யர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

அதேவேளை, அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையில் இடம்பெற்றுள்ள இந்த கைதி பரிமாற்ற நடவடிக்கையானது, சுமார் 18 மாதங்களுக்கு மேலாக திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஊடகவியலாளர் உள்ளிட்ட அமெரிக்க குடிமக்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து அமெரிக்க அதிகாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Share
தொடர்புடையது
world 53
செய்திகள்இலங்கைபிராந்தியம்

வெல்லம்பிட்டியில் 4 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் மீட்பு: இருவர் கைது

கொழும்பு, வெல்லம்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் (PNB) நேற்று (மே...

world 52
செய்திகள்இலங்கைபிராந்தியம்

கொழும்பில் பிடிபட்ட 74 வியட்நாமியர்களுக்கு மே 14 வரை விளக்கமறியல்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு

கொழும்பு, கொள்ளுப்பிட்டி பகுதியில் உள்ள உத்தராநந்த மாவத்தையில் அமைந்துள்ள குடியிருப்பு வளாகம் ஒன்றில் வைத்து, இணையவழி...

world 51
செய்திகள்இலங்கைபிராந்தியம்

ஊழலுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் பதவி விலகிய NPP உறுப்பினர்: ராஜினாமா கடிதம் கசிந்த விவகாரத்தில் சர்ச்சை

தேசிய மக்கள் சக்தி (NPP) கட்சியின் குருநாகல் மாநகர சபை உறுப்பினர் பி.டபிள்யூ. பிரேமச்சந்திரா, தனது...

world 50
செய்திகள்இலங்கைபிராந்தியம்

தோல் புற்றுநோய் அபாயம்: காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அவதானம் தேவை

இலங்கையில் தோல் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகச் சுகாதார மேம்பாட்டுப் பணியகம் எச்சரிக்கை விடுத்துள்ளது....