8 1
இலங்கைசெய்திகள்

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

Share

படகு விபத்திலிருந்து மீட்கப்பட்ட கடற்றொழிலாளர்களை சந்தித்த இந்திய அதிகாரி

யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பகுதியில் இலங்கை கடற்படை படகுடன் மோதியபோது கவிழ்ந்த படகில் இருந்து மீட்கப்பட்ட இரண்டு கடற்றொழிலாளர்களை, யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் அதிகாரிகள் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்குச் சென்று சந்தித்துள்ளனர்.

இதன்போது அவர்களின் நலம் குறித்து விசாரித்த, இந்திய தூதரக அதிகாரி சாய் முரளி அவர்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

அத்துடன் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக இந்தியாவில் உள்ள அவர்களது குடும்பங்களுக்கு தொலைபேசி அழைப்புகளையும் தூதரக அதிகாரிகள் ஏற்படுத்திக்கொடுத்தனர்.

முன்னதாக, கச்சத்தீவுக்கு வடக்கே 5 கடல் மைல் தொலைவில் இலங்கை கடற்படை கப்பல் ஒன்றும் இந்திய மீன்பிடி படகு ஒன்றும் நேற்று வியாழக்கிழமை மோதி விபத்துக்குள்ளாகின.

இதன்போது கப்பலில் இருந்த நான்கு இந்தியர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காணாமல் போயுள்ளதுடன், இரண்டு பேர் மீட்கப்பட்டு காங்கேசன்துறை கரைக்கு அழைத்து வரப்பட்டனர்.

Share
தொடர்புடையது
25 684d9895c5fed
உலகம்செய்திகள்

இதுவே தாக்குதலின் ஆரம்பம்.. நெதன்யாகு வெளியிட்ட திடுக்கிடும் தகவல்!

இனிவரும் காலங்களில் ஈரான் மீது மேற்கொள்ளப்படும் தாக்குதல்கள் மிக மோசமானதாக இருக்கும் என இஸ்ரேலிய பிரதமர்...

25 684daa7056229
உலகம்செய்திகள்

திடீரென இரத்து செய்யப்பட்ட அமெரிக்க – ஈரான் அணுசக்தி பேச்சுவார்த்தை!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் நடைபெறவிருந்த அணுசக்தி பேச்சுவார்த்தை திடீரென இரத்து செய்யப்பட்டுள்ளது. நாளை நடத்தப்படவிருந்த குறித்த...

25 684db2d85251f
இலங்கைசெய்திகள்

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் போர்பதற்றம்.. பேரச்சத்தில் உலக நாடுகள்!

மத்திய கிழக்கில் போர்பதற்றம் அதிகரிக்கும் வாய்ப்பு மிகவும் சாத்தியமான ஒன்று என ஜேர்மன் அரசாங்கம் எச்சரிக்கை...

25 684db89645eef
உலகம்செய்திகள்

அவசரமாக மத்திய கிழக்கிற்கு பறக்கும் பிரித்தானிய ஜெட் விமானங்கள்! வலுக்கும் போர் பதற்றம்

மத்திய கிழக்கில் போர் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், பிரித்தானியாவின் சில ஜெட் விமானங்கள் அங்கு...