18 14
இலங்கைசெய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் தீர்மானதில் ரணில்! அரசியல்வாதி கசியவிட்ட தகவல்

Share

ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகும் தீர்மானதில் ரணில்! அரசியல்வாதி கசியவிட்ட தகவல்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்கடிக்கப்படுவோம் என தெரிந்தே போட்டியில் இறங்குபவர் அல்ல என ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளரும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் தற்போதைய தேசிய அமைப்பாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

இணைய செய்தி சேவை ஒன்றுக்கு வழங்கிய உரையாடலில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தற்சமயம் உறுதியான தோல்வியை எதிர்நோக்கியுள்ளார்.

அனைவருக்கும் முன்பாகவே, கட்டு பணத்தை வைப்பு செய்துள்ள போதிலும் ஜனாதிபதி தேர்தலில், அவர் போட்டியிடுவது சந்தேகமே என அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

எனவே, வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் கடைசி நாள் வரை இது தொடர்பில் நிச்சயமற்ற நிலை நிலவும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதுவரையில் ரணில் விக்ரமசிங்க, தாம் தோற்றுப்போவதாக நினைத்து ஜனாதிபதி தேர்தலுக்கு வேறு சிலரையே முன்மொழிந்து வந்தார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனவே, ரணில் விக்ரமசிங்க கட்டுப்பணம் செலுத்திய போதிலும், கடைசி நேரத்தில் கூட அவர் போட்டியிடப் போவதில்லை என்ற எண்ணம்,தனக்கு தனிப்பட்ட முறையில் இருப்பதாக திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Share
தொடர்புடையது
10 5
இலங்கைசெய்திகள்

நானுஓயாவில் தேயிலையுடன் குடைசாய்ந்த லொறி: இருவர் படுகாயம்

நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் தேயிலைக் கொழுந்து ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வீதியில்...

9 4
இலங்கைசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய தமிழ் இளைஞர்கள்

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முயன்ற தமிழ் இளைஞர்கள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்....

8 6
இலங்கைசெய்திகள்

மற்றுமொரு சேவைக்கு அமைச்சரவை அங்கீகாரம்

நகர அபிவிருத்தி, நிர்மாணத்துறை மற்றும் வீடமைப்பு அமைச்சினால் நாடுதழுவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நடமாடும் சேவைக்கு அமைச்சரவையின்...

7 9
இலங்கைசெய்திகள்

இரு கொலைகளை செய்த முன்னாள் அமைச்சரின் மனைவியும் விடுதலை : நீதிமன்றில் தகவல்

இலங்கையில் ஜனாதிபதி பொதுமன்னிப்பு விடயத்தின் விசாரணைகளுக்கு மத்தியில், கொலைக்காக மரண தண்டனை பெற்ற முன்னாள் அமைச்சர்...