13 14
இலங்கைசெய்திகள்

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

Share

அனுரகுமாரவின் கூட்டத்தில் சீருடைகளுடன் தாதியர் : விளக்கமளித்த தேர்தல் ஆணைக்குழு

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்கவின் (Anura Kumara Dissanayake) தலைமையில் நடைபெற்ற தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில், அரச தாதியர்கள் சீருடையில் கலந்து கொண்டமை குறித்து தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெளிவுபடுத்தியுள்ளது.

அது, தேர்தல் விதிமுறைகளை மீறுவதாக அமையாது என்று ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

முன்னதாக, பல்வேறு தரப்பினரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு, பதில் அளித்துள்ள, தேர்தல்கள் ஆணைக்குழு, பொது ஊழியர்களை நிர்வகிக்கும் ஸ்தாபன சட்டத்தின் கீழ் அத்தகைய பங்கேற்பு அனுமதிக்கப்படுகிறது என்று நியாயப்படுத்தியுள்ளார்.

ஸ்தாபனச் சட்டத்தின்படி, இது தேர்தல் விதிமீறல் ஆகாது என்று கூறிய தேர்தல் ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர், எந்த அரசியல் கட்சியையும் ஆதரிக்கும் உரிமை அரச ஊழியர்களுக்கு உண்டு என்பதை எடுத்துக்காட்டினார்.

இந்தநிலையில், தேசிய அகில இலங்கை தாதியர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக சுகாதார அமைச்சின் செயலாளர், தாதியர்களுக்கு கடமை விடுப்பு வழங்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும், சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான பிரசாரம் என்ற கபே (CaFFE), மாநாட்டில் சீருடையில் அரசு தாதியர்கள் கலந்து கொள்வது நிறுவன விதிகள் மற்றும் தேர்தல் விதிமுறைகள் இரண்டையும் மீறுவதாகக் குற்றம் சாட்டி மறுப்புக் குரல் கொடுத்துள்ளது.

Share
தொடர்புடையது
15 3
செய்திகள்உலகம்

கியூபா எல்லைப்படையில் தாக்குதல்: அமெரிக்கப் படகில் இருந்த நால்வர் உயிரிழப்பு, 6 பேர் கைது!

அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்ட வேகப்படகொன்றில் இருந்தவர்கள் மீது கியூபா எல்லைக் காவல் படையினர் மேற்கொண்ட துப்பாக்கிப்...

14 1
செய்திகள்உலகம்

வெனிசுலாவில் 3,200 அரசியல் கைதிகள் விடுதலை: புதிய அரசாங்கத்தின் அதிரடி நடவடிக்கை!

வெனிசுலாவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பொது மன்னிப்புச் சட்டத்தின் (Amnesty Law) கீழ், 3,200 இற்கும் மேற்பட்ட...

13 1
இலங்கைசெய்திகள்பிராந்தியம்

தித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு சிறப்பு உதவித்தொகை: மஹாபொல அறக்கட்டளை அறிவிப்பு!

‘தித்வா’ (Titwa) சூறாவளியால் பாதிக்கப்பட்டுப் பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு, சிறப்பு மற்றும் ஒரு...

12 2
செய்திகள்இலங்கைபிராந்தியம்

பொடி லெசிக்கு 7 நாட்கள் சிஐடி தடுப்புக் காவல்: கொலை, கொலை முயற்சி என 26 வழக்குகள் நிலுவை!

இந்தியாவில் கைது செய்யப்பட்டு இன்று இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குழுத் தலைவரும், போதைப்பொருள்...