24 66a4d7a0c3ad3
இலங்கைசெய்திகள்

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

Share

காவல்துறை மா அதிபர் விவகாரம்: ஜனாதிபதி தேர்தலில் செலுத்தும் தாக்கம்

சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் தொடர்பில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு, ஜனாதிபதி தேர்தலில் எந்தவித தாக்கத்தையும் செலுத்தாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க (R.M.A.L. Ratnayaka) தெரிவித்துள்ளார்.

எனினும், சிறிலங்காவின் சிரேஷ்ட காவல்துறை மா அதிபர்களின் உதவியுடன் தேர்தல்கள் தொடர்பான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென அவர் ஊடகங்களுக்கு கூறியுள்ளார்.

இலங்கையில் தற்போது காவல்துறை மா அதிபர் இல்லை எனவும் இதனால் தேர்தல்கள் நடைபெறுவதில் சிக்கல்கள் ஏற்படுமெனவும் பல கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன், சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரங்களும் கேள்விக்குட்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த பின்னணியில், காவல்துறை மா அதிபர் இல்லாவிட்டாலும், அறிவிக்கப்பட்ட திகதியில் இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுமென சிறிலங்கா தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பான வழிகாட்டுதல்கள் விரைவில் வெளியிடப்படுமெனவும், இதனை வேட்பாளர்கள் மற்றும் பொது மக்கள் சரிவர பின்பற்ற வேண்டுமென அவர் அறிவுறுத்தியுள்ளார்.

தேர்தல் வழிகாட்டுதல்களை பின்பற்ற மறுக்கும் மற்றும் அதனை எதிர்த்து செயல்படும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுமெனவும் அவர் எச்சரித்துள்ளார்.

மேலும், இலங்கையில் உள்ள தேர்தல்களை கண்காணிக்கும் அனைத்து அமைப்புக்களும் மிகவும் அவதானத்துடன் செயல்பட வேண்டுமெனவும், சுதந்திரமான மற்றும் நியாயமான முறையில் தேர்தல்கள் நடைபெறுவது உறுதி செய்யப்பட வேண்டுமெனவும் ரத்நாயக்க வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
low r 1
இலங்கை

உயர்தர பரீட்சையை ஒத்தி வைக்க கோரிய மனு மீதான உத்தரவு.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை ஒத்திவைத்து உத்தரவிடுமாறு கல்விப் பொதுத்...

are 2 1
இலங்கை

அயலவரை அடித்துக்கொன்ற சந்தேக நபர் கைது.

கடந்த 14ஆம் திகதி இரவு தம்புள்ளை விகாரை சந்தியில் அமைந்துள்ள கடை அறைகளில் தற்காலிகமாக வசித்து...

யோஷித ராஜபக்ஷ
இலங்கை

யோஷித ராஜபக்ஷவிற்கு எதிரான வழக்கு நீதிமன்று பிறப்பித்துள்ள உத்தரவு.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டியான டெய்ஸி ஃபொரஸ்ட்...

Gotabaya Rajapaksa
இலங்கை

பேசுபொருளாகியுள்ள மாத்தளை மனிதப்புதைகுழி – அகப்படுவாரா கோட்டா?

மாத்தளை மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைக்குழி சம்பவம் நடந்த காலப்பகுதியில் அதாவது 1988 மே முதலாம்...