இந்தோனேசியாவின் மத்திய ஜாவா மாகாணத்தில் இடம்பெற்ற கோர பேருந்து விபத்தில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தாவிலிருந்து யோக்யகர்த்தா நகரத்தை நோக்கி 35 பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பேருந்து, திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியின் நடுவே இருந்த தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து நடந்த இடத்திலேயே 6 பயணிகள் உயிரிழந்தனர். பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 10 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது.
எஞ்சிய பயணிகள் தொடர்ந்தும் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்துக்கான துல்லியமான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. அதிக வேகம் அல்லது இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என்ற கோணத்தில் உள்ளூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.