19 12
இலங்கைசெய்திகள்

மீண்டும் தவணையிடப்பட்டுள்ள குருந்தூர் மலை வழக்கு

Share

மீண்டும் தவணையிடப்பட்டுள்ள குருந்தூர் மலை வழக்கு

முல்லைத்தீவு (Mullaitivu) – குருந்தூர்மலை விவகாரம் தொடர்பான வழக்கு மீண்டும் தவணையிடப்பட்டுள்ளது.

B1053/2022 என்ற இலக்கமுடைய குறித்த வழக்கு நேற்றையதினம் (25) முல்லைத்தீவு நீதிமன்றில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது, வழக்கில் சம்பந்தப்பட்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் ( T. Raviharan) மற்றும் சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன் (Rattinarasa Mayuran), கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் (Chinnarasa Lokeswaran) ஆகியோர் முன்னிலையாகியுள்ளனர்.

இந்நிலையில், வழக்கு விசாரணை விவாதங்கள் நடைபெற்று எதிர்வரும் வருடம் (2025) ஜனவரி மாதம் 16 ஆம் திகதிக்கு மீண்டும் நீண்ட கால இடைவெளிக்கு பின்னர் குறித்த வழக்கு தவணையிடப்பட்டுள்ளது.

குருந்தூர் மலையை அண்டிய பகுதிகளில் நில அபகரிப்பு தடுக்கப்பட வேண்டும் என தண்ணிமுறிப்பு மற்றும் குமுழமுனை பகுதி மக்களால் கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி குருந்தூர் மலையில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அந்த ஆர்ப்பாட்டத்தில் மக்களோடு கலந்து கொண்ட முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும், சமூக செயற்பாட்டாளர் இரத்தினராசா மயூரன், கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் ஆகியோரை விசாரணைகளை மேற்கொள்வதற்காக முல்லைத்தீவு காவல்நிலையத்திற்கு , வருமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்திருந்தனர்.

இதன்போது காவல்நிலையம் சென்றவர்களை அங்கு வைத்து கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
Arrested With
இலங்கை

கைது செய்யப்பட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பலங்கொட பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் காலி மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது...

Weapons
இலங்கை

சிறைச்சாலைக்குள் கைப்பற்றப்பட்ட ஆயுதங்கள் – தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட தேங்காய்கள்.

நீர்கொழும்பு சிறையில் நடந்த மோதலின் போது கைதிகள் அதிகாரிகளைத் தாக்கப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் கூர்மையான ஆயுதங்களின்...

ravi karunanayake cry 1
இலங்கை

ரவி கருணநாயக்கவிற்கு விடுக்கப்பட்டுள்ள அழைப்பாணை.

  இலஞ்சம் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் இம் மாதம் 17ஆம் திகதி முன்னிலையாகுமாறு, கொழும்பு மாவட்ட...

penson
இலங்கை

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சி தகவல்.

  வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கையர்களுக்காக புதிய ஓய்வூதியத் திட்டத்தை விரைவாகத் தயாரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக...