6 19
இலங்கைசெய்திகள்

காத்தான்குடியில் குண்டு தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

Share

காத்தான்குடியில் குண்டு தாக்குதல் இடம்பெற்ற வீட்டிற்கு அருகில் கைக்குண்டு மீட்பு

மட்டக்களப்பு – காத்தான்குடி, பூநொச்சிமுனையில் குண்டு தாக்குதலுக்கு இலக்கான வீடு ஒன்றிற்கு அருகிலுள்ள வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகான் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த கைகுண்டானது நேற்று(21) இரவு மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பூநொச்சிமுனையில் பச்சை வீட்டுத்திட்டம் என அழைக்கப்படும் முகைதீன் ஜூம்ஆஹ பள்ளி வீதியில் வீடு ஒன்றின் முன்னால் உள்ள வடிகானுக்கு அருகில் கைவிடப்பட்ட கைக்குண்டு ஒன்று கிடப்பதை சம்பவதினமான நேற்று(21) இரவு அவதானித்த பொதுமக்கள் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்துக்கு சென்று கைவிடப்பட்டிருந்த கைக்குண்டை மீட்பதற்கு நீதிமன்ற அனுமதியை பெறுவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதுடன் விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கும் பிரிவின அழைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இதேவேளை, இந்த கைக்குண்டு மீட்கப்பட்ட வீட்டிற்கு அருகிலுள்ள வீட்டின் மீது கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இரவு அடையாளம் தெரியாதோரால் தயாரிக்கப்பட்ட புதியவகையான குண்டு வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
images 24
செய்திகள்இலங்கைபிராந்தியம்

காட்டு யானையைச் சித்திரவதை செய்து தீ வைத்த சம்பவம்: சந்தேக நபர்களுக்கு டிசம்பர் 24 வரை விளக்கமறியல்!

சீப்புக்குளம் பகுதியில் காட்டு யானையொன்றைச் சித்திரவதை செய்து, அதன் உடலில் தீ வைத்த சம்பவத்துடன் தொடர்புடைய...

1743195570
செய்திகள்உலகம்

சிட்னி துப்பாக்கிச் சூடு: வெறுப்புப் பேச்சைத் தடுக்க அவுஸ்திரேலியாவின் புதிய சட்டங்கள் மற்றும் கடும் எச்சரிக்கை!

அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் யூத சமூகத்தினரை இலக்கு வைத்து நடத்தப்பட்ட கொடூரமான துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து,...

1739447780 5783
இந்தியாசெய்திகள்

இந்திய விமானங்களுக்கான வான்வெளித் தடையை ஜனவரி வரை நீடித்தது பாகிஸ்தான்!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியைப் பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடையை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிப்பதாக...

25 6939a0f597196 1
செய்திகள்இலங்கை

டிட்வா சூறாவளியின் தாக்கம்: 200 கடல் மைல் கடற்கரை மாசு – கடற்றொழிலுக்குப் பாரிய அச்சுறுத்தல்!

சமீபத்தில் நிலவிய ‘டிட்வா’ (Ditwah) சூறாவளி மற்றும் வெள்ளப்பெருக்கினால் இலங்கையின் சுமார் 200 கடல் மைல்...