24 669b91522188c
இலங்கைசெய்திகள்

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

Share

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை கடிதம்

சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கத் தவறிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணையம் எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது.

இதன்படி முப்பது இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் சொத்து மற்றும் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்கவில்லை என்று நாடாளுமன்ற வட்டாரங்கள் கூறுகின்றன.

சொத்துப் பொறுப்பு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டிய நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை தொடர்பில் மேற்கொண்ட விசாரணைகளில் இது தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.

சொத்துப் பொறுப்புச் சட்டத்தின்படி, ஒவ்வொரு உறுப்பினரும் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 30ஆம் திகதிக்கு முன் சபாநாயகரிடம் சொத்துக்கள் மற்றும் கடன்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகள் ஆணைக்குழு சட்டத்தின்படி சொத்துப் பிரகடனங்களை சமர்ப்பிக்கத் தவறும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அபராதம், சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் திணறும் அரசியல்வாதிகள்
இலங்கை

இலங்கைக்கு கொண்டு வரப்படவுள்ள 50 இற்கும் மேற்பட்ட ஆபத்தான நபர்கள் – திணறும் அரசியல்வாதிகள்.

  வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள, சர்வதேச சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 73 சக்திவாய்ந்த பாதாள உலகக்...

Cheated
இலங்கை

பேஸ்புக் ஊடாக இடம்பெற்ற கோடிக்கணக்கான பண மோசடி!

  இலங்கையில் பேஸ்புக் ஊடாக மக்களை ஏமாற்றிய நபர் தொடர்பான முறைப்பாடுகளை மிரிஹான விசேட குற்றப்...

Cid Investigations
இலங்கை

உயர்தர பரீட்சை மோசடிகள் – ஆரம்பிக்கப்பட்டது குற்றப்புலனாய்வு பிரிவு விசாரணை.

அண்மையில், அம்பாந்தோட்டைபகுதியில் உயர்தர பரீட்சை வினாத்தாள் ஒருங்கிணைப்பு மையத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் வினாத்தாள் முறைகேடுகள் குறித்து...

Dora
இலங்கை

அங்குலான கடற்பரப்பில் விபத்துக்குள்ளான படகிலிருந்தவர்கள் தொடர்பில் வெளியான தகவல்.

அங்குலானவிற்கு அருகில் உள்ள கடற்பரப்பில் கடற்படைக்குச் சொந்தமான டோரா படகொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. மேற்படி சம்பவம் தொடர்பில்...