24 669b01ec8a85d
இலங்கைசெய்திகள்

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்

Share

நாட்டில் நடைமுறைக்கு வரவுள்ள பயோமெட்ரிக் கடவுச்சீட்டுக்கள்

இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், எதிர்வரும் ஜனவரி, 2025 முதல் இலத்திரனியல் தட்டுகள்(Ships) உட்பொதிக்கப்பட்ட பயோமெட்ரிக் (Biometrics) கடவுச்சீட்டுகளை வழங்கத் தயாராகி வருகிறது.

இந்தநிலையில் புதிய கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் இலங்கையர்களுக்கான முன்பதிவு செயல்முறை இப்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பிற்கு வெளியே வசிக்கும் மக்களுக்கான செயல்முறையை எளிதாக்குவதற்காக, இணையம் மூலமான கடவுச்சீட்டு விண்ணப்பங்களையும் குடிவரவுத்திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக சுமார் 5 மில்லியன் பயோமெற்றிக் கடவுச்சீட்டுக்களை வழங்குவதற்கான கேள்விப்பத்திரம் கடந்த ஜனவரியில் கோரப்பட்டது.

எனினும் சில மேம்படுத்தல்களுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் செல்லலாம் என்று திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

பயோமெட்ரிக் அணுகல் தொடர்பான விடங்களில் ஜப்பான் மற்றும் சர்வதேச புலம்பெயர்ந்தோர் அமைப்பு என்பன இலங்கைக்கு ஆதரவளிக்கின்றன.

Share
தொடர்புடையது
25 692fae9358269 1
செய்திகள்இலங்கை

அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை: அமைச்சர் வசந்த சமரசிங்க உறுதி!

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்குப் பற்றாக்குறை இல்லை என அரசாங்கம் அறிவித்துள்ளது. பேரிடர் சூழ்நிலை காரணமாக...

image aef113ab57 1
செய்திகள்இலங்கை

ஹட்டன் – கொழும்பு வீதி மீண்டும் திறப்பு: பஸ் சேவைகள் ஆரம்பம்!

நாட்டில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக மண்சரிவு மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்ததால் பாதிக்கப்பட்டிருந்த ஹட்டன்...

1740048123351
செய்திகள்இலங்கை

அனர்த்தத்தின் பெயரால் நிதி மோசடி: நுவரெலியாவில் பணம் வசூலிக்கும் மோசடிக்காரர்கள் குறித்து அவதானம் தேவை!

நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளம் மற்றும் மண்சரிவு உட்பட இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, சில நபர்கள்...

000 86jq4zl
செய்திகள்இலங்கை

இலங்கையில் புதிய சூறாவளி வதந்தி பொய்: டிச. 4-5இல் லேசான மழைக்கே வாய்ப்பு – வளிமண்டலவியல் திணைக்களம்!

இலங்கையில் வரும் நாட்களில் புதிய சூறாவளி ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பரவி வரும் வதந்திகள் தவறானவை என்று...